Monday, September 25, 2017
Sunday, September 24, 2017
LPG சமையல் கேஸ் சிலிண்டர் வெடித்து சிதறுமா?
அது சமையல் சிலிண்டரின் DUE PERIOD FOR TESTING அதாவது பரிசோதனைக்கு உரிய காலக்கெடுவை குறிக்கிறது.
அதையும் தாண்டி சமையல் சிலிண்டர் வெடிக்குமா?
வெடிக்காது, துகள்களாக வெடித்து சிதற அந்த சமையல் சிலிண்டரின் உலோகம் அவ்வளவு எளிதானதில்லை.
மேலும் சமையல் சிலிண்டர் தாங்கும் சக்திக்கு மிகுந்த அழுத்தமும் பிரஷ்ஷரும் அந்த சிலிண்டருக்குள் இல்லை.
சுற்றுப்புற அதிகளவு வெட்பத்தினால் சிலிண்டரின் துவாரம் வழியாக கேஸ் லீக்காகி பின்னர் மண்டலமாக கோர்த்து நிற்கும் கேஸ் பகீரென பற்றி வெடிக்க வாய்ப்பு இருக்கே ஒழிய சும்மா இருக்கும் சிளின்டரே திடீரென வெடிக்க வாய்ப்பு இல்லை.... இன்னும் சொல்லப்போனால் திரைப்படத்தில் காட்டுவது போல துப்பாக்கியால் சுட்டாலும் கூட, லீக் தான் ஆகுமே தவிர பற்றி வெடிக்காது... மேலும் LPG சமையல் கேஸ் ஆனது ஏனைய வாயு போன்று அல்லாது காற்றில் வெகுவாக மிக வேகமாக கலந்து விடும்.... அதுபோக வெளிப்புற தட்பவெட்ப சூழலினால் ஏற்படும் உட்புற வாயு விரிவாக்கத்துக்கு இடமளிக்கும் விதமாக அதன் கொள்ளவில்லை 80–85% வரை தான் நிரப்புவார்கள்.
ஆகவே LPG எனும் சமையல் எரிவாயு கேஸ் சிலிண்டர் காலவிதியாகி தன்னாலேயே பாதியாக அல்லது துகள்களாக வெடித்து சிதற சாத்தியமே இல்லை அப்படியான சம்பவம் நடந்த ரெக்கார்டும் இதுவரை உலகில் எங்குமே பதிவாகவும் இல்லை.
குறிப்பு: https://www.iocl.com/download/statement-from-iocl.pdf
இப்படிக்கு
சமூக அக்கறையுடன்
நாகூர் தீன்
24/09/2017
Saturday, September 23, 2017
நாகூர்.ம.ந.ச. போராளிகள், நாகூர் பிரச்னையை.... தமிழகம் அறிய முயற்ச்சி செய்துவிட்டார்களா?
ஆக்சுவலா இப்ப வர வர தமிழக மக்களின் உண்மையான போராட்டமே என்னானா பிரச்சனையின் அடிப்படையில் போராட்ட குழுக்களை நம்புவதா அல்லது போராட்ட குழுக்களின் அடிப்படையில் உண்மையான பிரச்சனைகள் தீர்ந்துவிடும் என நம்புவதா என்பது தான்...
எவர் MLA வாக இருக்கும்போ இந்த துறைமுகம் கட்டப்பட்டதோ அவரே இப்ப போராளியாக மாறி தன்னை தானே people savior ஆக காட்டிக்கொள்வதும்....
முன்பை காட்டிலும் இப்ப அதிக அளவில் மேற்படியான் வெளிப்படையாவே செயற்படுவதும்....
நல்லா பிடிக்கிறாருபா தும்ப விட்டுட்டு வாலை... பாவம் அவரும் தான் என்ன செய்வாரு தனக்கும் எதாச்சும் வேணும்ல முன்னிலை படுத்திக்க..
ஆக இதில் உள்ள போராட்ட குழுக்களை வைத்து பார்க்கையில்....
தமிழக மக்களின் மொத்த பிரச்சனையே இம்புட்டு தானா இல்ல ஒட்டு மொத்த போராடட குழுக்களின் எண்ணிக்கையே அம்புட்டா என வியப்பாக இருக்கிறது...
இதன் மத்தியில் நீங்க உங்க பிரச்சனையை "தமிழகம் அறிய முயற்ச்சி செய்து விட்டீர்களா" பேஷ் பேஷ்...
உங்க முயற்ச்சியை குறை சொல்லவில்லை ஆனா உங்கள நீங்களே "தமிழகம் அறிய முயற்ச்சி செய்துள்ளோம்" என்று கூறி தட்டிக்கொடுத்துக் கொள்கிறீர்களே அதை கண்டு தான் வியக்கிறேன்.
இப்படிக்கு
சமூக அக்கறையுடன்
நாகூர் தீன்
23/09/2017
Friday, September 22, 2017
டொனால்ட் டிரம்ப்பின் பதவி காலம் இனி நீடிக்குமா?
டொனால்ட் டிரம்ப் இன்னும் அதிக நாட்களுக்கு அவரது பதவியில் நீடிக்க மாட்டார் என எதிர்பார்க்கப் படுகிறது.... என்ன காரணம்? ஒன்றா இரண்டா இரண்டாயிரம் இருக்க அதில் எதை எதை சொல்ல.... நாளொரு புத்தி பொழுதொரு கோளாராக உளறுவது மட்டுமல்லாமல் செய்துக்கொண்டு வந்தால் யாருக்கு தான் சரிபட்டு வரும்....
சில மாதங்கள் முன்புவரை அமேரிக்க அதிபர் என்றாலே சர்வதேச அளவில் ஒரு மாபெரும் மதிப்பு இருந்து வந்தது அது இப்போ அதல பாதாளத்தில் மதிப்பு இழந்து, ஓஹ்...! அவனா என்று கேளிக்கைக்கு உரியதாக ஆகிவிட்டது.
இப்போதைய காலத்துக்கு சர்வதேச தலைவராக மக்கள் போற்றுவது யாரை என்றால் அது ஜெர்மானிய ச்சான்ஸ்லர் அங்கலா மெர்கல்... அவர்களை தான்... ( வரும் 24 செப்டெம்பர் , 2017 அன்று ஜெர்மனியில் தேர்தல் நடக்க இருக்கிறது.)
இந்நிலையில் இந்த வருட இறுதிவரை டொனால்ட் டிரம்ப் தாக்கு பிடித்தல் என்பது பெரிய விஷயம் என வாஷிங்டன் வட்டாரத்தில், ஆளும் பெரும்பான்மையான ரிபப்ளிக்கன் கட்சியை சேர்ந்த மூத்த செனட்டர்களே அதிலும் செனட் மெஜாரிட்டி தலைவரே முனங்க ஆரம்பித்து விட்டார் என்பது வெளிப்படையாக தெரிய வந்துள்ளது...
அதிலும் குறிப்பாக கடந்த ஏழு மாதத்தில் டொனால்ட் டிரம்ப்பிற்கு மிக நெருக்கமான கூட்டாளிகள் ஆன ஆலோசகர் மற்றும் முக்கிய செக்ரெட்ரிகள் என
1. மைக்கல் ஃப்லின் (பிப்ரவரியில்)
2. ரயன்ஸ் ப்ரீபஸ்
3. ஷான் ஸ்பைசர்
4. அந்தொனி ஸ்காராமுச்சு ( வெறும் பத்து நாட்களே நிலைத்த "தி மூச்")
5. ஸ்டீவ் பேனன் (ஜனாதிபதியின் முக்கிய ஆலோசகரில் ஒருவர்)
6. செப் கோர்கா (கவுண்டர் டெரொரிஸம் அட்வைஸர் பதவியில் 25/08/2017 வெள்ளிக்கிழமை வெளியேற்றப்பட்டார்)
அந்தொனி முச்சி, ஸ்டீவ் பேனன் மற்றும் செப் கோர்கா ஆகியோர் புதிதாக பதவிக்கு வந்த வெள்ளை மாளிகையின் ச்சீஃப் அஃப் ஸ்டாஃப் முன்னாள் இராணுவ ஜெனரல் ஜான் கெல்லி அவர்களால் வெளியேற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இத்தகைய சூழலில் டொனால்ட் டிரம்புடன் இப்போது நெருங்கி இருப்பது அவரது மகளும், மகளின் கணவன் மருமகனான ஜனாதிபதி ஆலோசகர் ஜரெட் குஷ்னர் மட்டும் தான்...
நான் முந்தைய பாராவில் குறிப்பிட்ட முன்னாள் ஹோம் லாண்ட் செக்யூரிட்டி தலைவரும், தற்போதைய வெள்ளை மாளிகையின் ச்சீஃப் அஃப் ஸ்டாஃப் ஆன, முன்னாள் இராணுவ ஜெனரல் ஜான் கெல்லி அவர்கள் கூட தற்போது டொனால்ட் டிரம்ப் என்றவரை ஒரு புத்தி ஸுவாதீனம் இல்லாத சிறு குழந்தையை பராமரிப்பது போன்று தான் ஒழுங்கு படுத்த முயற்சித்து அலுத்து போகிறார் என்றும் வாஷிங்டன் வட்டாரத்தில் செய்திகள் அடிப்படுகிறது.
ஏற்கனவே இவராக புதிதாக பிரச்சனைகளை உருவாக்குவது போதாதென்று.. சென்ற வாரம் நிகழ்ந்த நியோ நாக்ஸி, கேகேகே, வெள்ளை இன மேலாதிக்கவாத இனவெறியர்களுக்கு ஆதரவாகவும், அதை எதிர்த்த நிற வெறி, இன வெறி மற்றும் நிற வேற்றுமைக்கு எதிர்ப்பு காட்டிய மக்களுக்கு எதிராகவும், அமெரிக்க உள்நாட்டு சிவில் போர் சமயத்தில் இனவெறி தாண்டவம் ஆடிய வெள்ளை இன வெறிபிடித்த ஜெனரல்களின் சிலை அகற்ற கூடாதென என இவர் வெளிப்படையாக பேசிய பேச்சு போன்றவைகள் கட்சி பாகுபாடு இல்லாத வகையில் அமேரிக்க பெரும் சமுதாய மக்கள் அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைத்தது.
இவர் அமெரிக்க பொதுமக்களின் ஜனாதிபதியாக இல்லாமல் இனவெறியர்களின் பிரதிநிதியாக இருக்கிறாரே என்று இவரது நெருங்கிய கூட்டாளிகளே இவரை விட்டும் தள்ளி போய் நின்று விமர்சனம் செய்ய ஆரம்பித்தார்கள்.
இவ்வாறான சூழலில் தான், அமெரிக்க உச்ச நீதிமன்றத்தை அவமதித்த இனவெறி தனமாக ஹிஸ்பானிக் மக்களுக்கு எதிராகவும் காவல்துறை கஸ்டடியில் இருந்த ஹிஸ்பானிக் கைதிகளிடம் கொடுமையான விதத்தில் நடந்தது போன்ற அடுக்கடுக்கான எண்ணற்ற குற்றத்துக்கு சொந்தக்காரரான அரிசோனா மாநிலத்தில் உள்ள மரிகோபா கவுண்ட்டி காவல்துறை ஷெரீப் ஜோசஃப் அர்பெயோ வை ஜனாதிபதி மன்னிப்பில் டொனால்ட் டிரம்ப் விடுவித்தது போன்றவை அமெரிக்க மக்கள் விரோத போக்காக, வெள்ளை இனவெறி போக்காக பார்க்கப்படுகிறது.
இது ஒருபுறம் இருக்க இராணுவத்தில் சிறப்பாக பணியாற்றி வரும் டிரான்ஸ் ஜெண்டர் இராணுவ வீரர்களை வெளியேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட இருப்பதாக பேசி வருவதும் அமேரிக்க மக்கள் மத்தியில் அமெரிக்க அதிபரை நோக்கிய கசப்புணர்வை அதிகரிக்க செய்துள்ளது என்றால் அது மிகையாகாது.
இதனிடையே ஆஃப்கானிஸ்தானில் மீண்டும் வலுப்பெற்று வரும் அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் புரட்சி எதிராக, அந்நாட்டில் ஒரு காலத்தில் நாகரிகம் மேலோங்கி பெண்கள் குட்டை அரைப்பாவாடை அணிந்தவர்களாக இருந்துள்ளார்கள் என்ற பழைய 75 ~ 80 களின் புகைப்படத்தை டொனால்ட் டிரம்ப்பிடம் காட்ட அவரும் அப்ப சரி இன்னும் கூடுதலாக துருப்புகளை அனுப்பி மீண்டும் சண்டையிட்டு நவநாகரீகத்தை நிலைநாட்டுவோம் என்று ஒப்புதல் அளித்துள்ளார் என்றும் அதிகாரப்பூர்வ கன்ஸர்வேடீவ் செய்தி ஊடகங்கலும் வெட்கம் இல்லாமல் குறிப்பிட்டதும் இவ்விடத்தில் குறிப்பிடத்தக்கது.
குறிப்பு: ஃபேஸ் புக்கில் பலரும் படிக்கும் வகையில்.
இப்படிக்கு,
சமூக அக்கறையுடன்
நாகூர் தீன்.
(எழுதிய தேதி 26 ஆகஸ்ட், 2017)
ஈகை பெருநாள் அன்று மறைந்த தம் உறவினருக்காக குர்பானி கொடுக்கலாமா?
ஈகை பெருநாளின் குர்பானியை பொருத்தமட்டில்...
நபி (ஸல்) அவர்கள் தமது வாழ்நாளில் மறைந்த தமது பெற்றோருக்காகவோ அல்லது தமக்கு அரவணைப்பாக இருந்த சிறிய தந்தைக்காகவோ, இன்னும் சொல்லபோனால் தனது
பிரியமான பாசமிகுந்த இஸ்லாத்தை முதன்முதலில் ஏற்ற மனைவி கதீஜா (ரலி) அவர்களுக்காகவோ அல்லது அவர்களது நினைவாகவோ அல்லது அவர்கள் சார்பாகவோ ஹஜ்ஜு பெருநாள் தினத்தன்று குர்பானி கொடுத்தது கிடையாது.
அது போக சஹாபா பெருமக்கள் கூட நபி (ஸல்) அவர்களின் மறைவுக்குப் பின்னாளில், நபி (ஸல்) அவர்களின் சார்பாக அல்லது அவர்களின் நினைவாக ஹஜ்ஜு பெருநாள் தினத்தன்று குர்பானி கொடுத்ததும் இல்லை...
இன்னும் சொல்லப்போனால் பெரும் பெரும் ஈமாம்கள், தலைசிறந்த இஸ்லாமிய ஆய்வியல் அறிஞர் பெருமக்கள் கூட மறைந்தவர் சார்பாக குர்பானி கொடுத்ததில்லை.
அப்படி இருக்க, வழிமுறைகள் அல்லாது.. இஸ்லாமிய மார்க்க அடிப்படையில் கூட மறைந்த உறவினர் சார்பாக தனிப்பட்ட முறையில் அவர்களுக்கு என, அல்லது அவர்கள் பொருட்டு ஹஜ்ஜு பெருநாளை முன்னிட்டு குர்பானி கொடுக்க எந்த ம அடிப்படை சட்ட விதிமுறையும் இல்லை.
எனினும் விதிவிலக்காக, குர்பானி கொடுக்க மிகமிஞ்சிய போதிய செல்வம் இருந்த நிலையில் ஒருவர் தனது சார்பாக அல்லாஹுக்காக குர்பானி கொடுக்கும்படி கேட்டுக்கொண்ட நிலையில் மரணத்தி இருந்தாலே ஒழிய அவருக்காக இன்னொருவர் அவரது செல்வத்தில் இருந்து குர்பானியை நிறைவேற்றலாம் என்று ஹம்பலி வழிமுறையில் உள்ளது என அறிஞர்கள் கூறுகிறார்கள்..
இது கூட அல்லாஹுக்காக என்று அவர் உயிருடன் இருந்த காலத்தில் நேர்ந்துக்கொண்ட நேர்ச்சை என்ற அடிப்படையில் அவர் விட்டு சென்ற போதிய செல்வத்தில் இருந்து அவருக்காக நிறைவேற்றுவது என்ற அடிப்படையில் மட்டுமே, மார்க்க வரையறுக்கப்பட்ட அடிப்படைக்கு உட்பட்ட நிலையில் ஆகுமானதாக ஆகும்.
ஆனால் இன்றைய காலத்தில் குடும்பத்திற்கு ஒருவர் என்ற அடிப்படையில் குடும்ப உறுப்பினர் யாராவது ஒருவர் குர்பானி கொடுத்தால் போதும் என்ற இஸ்லாமிய அடிப்படையை உணராது...
அதிலும் கூட ஹஜ்ஜு பெருநாள் அன்று அல்லாஹுக்காக குர்பானி கொடுப்பது என்பது உயிருடன் இருப்பவர்களின் சார்பாக மட்டுமே கொடுப்பது என்ற அடிப்படையை புரிந்துகொள்ளாமல்...
சிலர் சமீபத்தில் மறைந்த குடும்ப உறுப்பினர் சார்பாக குர்பானி கொடுப்பதும்..
நபி (ஸல்) அவர்கள் சார்பாக குர்பானி கொடுப்பது என்ற நூதன சடங்கை அனுஷ்டித்து வருவது என்பது இஸ்லாமிய மார்க்கத்தில் வரையறுக்கப்பட்ட அடிப்படைக்கு கட்டுப்படாமல் வரம்பு மீறுவதாகும் என மார்க்க அறிஞர்கள் கண்டனம் தெரிவிக்கிறார்கள்.
அதுபோக ஹஜ்ஜு பெருநாள் தினத்தை முன்னிட்டு குர்பானி என்பதும் கூட ஒருவருக்கு "கட்டாய கடமையா" அல்லது வசதி வாய்ப்பு இருப்பின் மட்டும் அல்லாஹுக்காக என்று "கூடுதல் நன்மை" சேர்க்கும் விஷயமாக செய்யப்படும் ஒரு அனுஷ்டானமா என்ற மார்க்க அடிப்படை உணர்ந்து செயற்படுவது நலம்.
மார்க்க அடிப்படையில் எதை செய்தாலும் அதன் முழு அடிப்படை உணர்ந்து எதற்காக?, ஏன்?, எவ்வாறு? என மார்க்க வரையறை உணர்ந்து அல்லாஹுக்காக மட்டுமே என செய்வது தான் ஆத்மார்த்தமான புரிதலுடன் செய்வது போன்று ஆகும், அப்போது தான் அதன் பலனும் நமக்கு முழுமையாக கிட்டும்.
அது அல்லாமல் ஏனோ தானோ என்று அடிப்படை உணராது செய்வது என்பது, என்னவென்றே அர்த்தம் உணராது எவறோ ஒருவர் புரியாது கேட்கும் வேண்டுதலுக்கு வெறுமனே கடமைக்கு மேம்போக்காக ஆமீன் சொல்லிவிட்டு கடமையை தீர்த்துக் கொள்வது போன்றாகும்...
செய்வதை எதற்கு எப்படி என்று தெரிந்து முழுமையாக புரிந்து ஆத்மார்த்தமாக நமது மறுமைக்கு பயனளிக்கும் வகையில் செய்வோம்.
அல்லாஹ் நம் அனைவரின் நல்ல அமல்களையும் ஏற்று அதன் நன்மைக்கு உரிய நன்மக்களாக நம் அனைவரையும் ஆக்கி அருள் புரிய வேண்டும் என பிரார்த்திக்கிறேன்.
நாம் செய்யும் நல்ல அமல்களை நமக்கு பயனளிக்கும் வகையில் செய்வோமாக.
இப்படிக்கு
சமூக அக்கறையுடன்
நாகூர் தீன்.
எந்த எண்ணையும் X 11 மிக எளிதாக பெருக்குவது எப்படி?
இன்று எனது மகளுக்கு நான் ஒரு புதிய கணித நுணுக்கத்தை கற்றுக் கொடுத்து வியப்பில் ஆழ்த்தியது போல...
நீங்களும் உங்க பிள்ளைகள் இடத்தில் கணித மேதையாக காட்டிக்கொள்ளலாம்...
உதாரணத்திற்கு.... எந்த எண்ணையும் பதினொன்றால மிக எளிதாக பெருக்கி காட்டி...
அதாவது துவக்கத்தில் அவர்கள் இடத்தில்
11 * 2 = ? என்ன என்று கேளுங்கள் 22 என்பார்கள்...
அது போன்று அடுக்கடுக்காக
11 * 3 = என்ன?
11 * 4 = என்ன ?
11 * 8 = என்ன ?
11 * 9 = என்ன ?
என்று கேட்டுவாருங்கள், அன்னைத்துக்கும் சரியான மிக எளிதில் பதில் தருவார்கள்...
சரி.... இப்ப
11 * 1234 = ? என்று கேட்டுப்பாருங்கள்...
திடிக்கிட்டு போய் நிற்பார்கள்...
சரி..அவ்வளவு கடினமானது வேண்டாம்.... சுலபமான ஒன்றை கேட்கிறேன் என்று கூறிவிட்டு
11 * 23 = ?
எவ்வளவு என்று கேளுங்கள்...
அதற்கும் சிலர் யோசிக்க ஆரம்பிப்பார்கள்.
இவ்விடத்தில் தான் நாம் கணித மேதையாக மாறி... ஒரு நுணுக்கத்தை அவர்களுக்கு கத்து கொடுத்து வியப்பில் ஆழ்த்த போகிறோம்....
11 * 23 = ? ரொம்ப சிம்பிள்.. 23ல் உள்ள 2+3 இரண்டையும் கூட்டினால் வரும் 5 என்ற விடையை 2க்கும் 3க்கும் நடுவே போட்டு விட வேண்டும், பதில் 253.. எப்படி ஈசியா இருக்கா...?
அதே போன்று தான்
11 * 1234 = ?
1234ல் உள்ள கடசியில் உள்ள 4 அப்படியே எழுதிக் கொள்ளுங்கள்..
4
பின்பு 4 முந்தைய எண் 3 கூட்டி 7 என்று எழுதிக்கொள்ளுங்கள்.
74
பின்பு அந்த 3 முந்தைய எண் 2 உடன் கூட்டி 5 என்று எழுதிக்கொள்ளுங்கள்...
574
பின்பு அந்த 2 முந்தைய எண் 1 உடன் கூட்டி 3 என்று எழுதிக்கொள்ளுங்கள்...
3574
பின்னர் மீதம் இருக்கும் முதல் எண் ஆன 1 அப்படியே எழுதிக்கொள்ளுங்கள்..
ஆக 11*1234 = 13574
ரொம்ப சுலபம் மனதளவில் கூட கூட்டி, சட்டென்று பெருக்கல் செய்தது போல பாவ்லா செய்து பிள்ளைகள் இடத்தில் ஜீனியஸாக காட்டிக்கொள்ளலாம்... எப்படி..
அதுபோக பெரிய எண் வந்தால் என்ன செய்வது என்று அஞ்ச தேவையில்லை... 8+4 என்று வர நேரிட்டால் 2 மட்டும் எழுதி விட்டு மீத 1 ஒன்றை அடுத்து உள்ள எண்ணுடன் கூட்டி வரும் எண்ணோடு சேர்த்துக் கொள்ளுங்கள்.
இப்படிக்கு
சமூக அக்கறையுடன்
நாகூர் தீன்
நாகூர் தர்காவில் தினகரனால் எடப்பாடிக்கு ஏற்படும் சிக்கலில் இருந்து தப்பிக்க சிறப்பு பிரார்த்தனை :-)
நாகூர் தீன்
22/09/2017
ஜுரம் வந்தால் உடம்பு ஏன் சூடாகிறது?
இக்கட்டுரையில் டெங்கு காய்ச்சல் தொடர்பாகவும் , அதற்குரிய இயற்க்கை மருத்துவம் தொடர்பாகவும், அலோபதி தொடர்பாகவும் எழுதி இருக்கிறேன்... அதர...
-
பரவலாக கடந்த 5 வருடங்களில் புதிதாக ஸ்மார்ட் ஃபோன் வாங்கி இணைய உலகத்தில் நுழைந்த பலர் தனக்கு வரும் செய்தி உண்மையா பொய்யா என்றெல்லாம் ஆய்வு ச...
-
இக்கட்டுரையில் டெங்கு காய்ச்சல் தொடர்பாகவும் , அதற்குரிய இயற்க்கை மருத்துவம் தொடர்பாகவும், அலோபதி தொடர்பாகவும் எழுதி இருக்கிறேன்... அதர...




