இக்கட்டுரையில் டெங்கு காய்ச்சல் தொடர்பாகவும் , அதற்குரிய இயற்க்கை மருத்துவம் தொடர்பாகவும், அலோபதி தொடர்பாகவும் எழுதி இருக்கிறேன்...
அதர்கு முன்பாக....
மண்ணச்சநல்லூரில் அதிசியம் டெங்கு காய்ச்சலுக்கு தமிழ் பதி மருந்து, மருந்து சாப்பிட்ட ஒரு மணி நேரத்தில் காய்ச்சல் குறைகிறது மதுரை தமிழ் பதி சித்த மருத்துவர் கவிஞர் கலையரசன் மருந்து தருகிறாராம்!!?
என்ன ஆச்சரியம்?
சித்த மருத்துவ முறையில் எந்த நோயையும் உடனுக்குடன் சரியாக்க கூடாது, அப்படி உடனுக்குடன் குறுகிய கால அவகாசத்தில் குணமாக்குவது பெரிய ஆபத்து, சன்னம் சன்னமாக மெல்ல மெல்ல தான் குணமாக்க வேண்டும் என்பார்களே...
(இப்ப என்ன ஆச்சு? எப்படி இந்த திடீர் விதி மீறல்?)
இவர் மட்டும் எப்படி DHF dengue hemorrhage fever மற்றும் DSS dengue shock syndrome போன்றவற்றை ஒரு மணி நேரத்தில் குணமாக்கி காட்டுகிறார்? அதிசயம் தான்.
அப்படி அச்செய்தி உன்மையாக இருந்தால் அவர் கண்டுபிடித்துள்ள மருந்தின் தகவல்களை உலகறியச் செய்வாரா.... ? செய்ய மாட்டார்....
கடந்து சென்ற சமீப நூற்றாண்டுகளில் வாழ்ந்த அனேக சித்த மருத்துவர்கள் தமது அனுபவ அறிவை எல்லோருக்கும் சென்ற அடைய செய்யாமல் முக்கிய குறிப்புகளை குடும்ப இரகசியமாகவே பாதுகாத்து மூடி வைத்து மறைத்து அழித்தொழித்து விட்டார்கள் என்பது தான் எதார்த்த உண்மை...
இன்று எஞ்சி இருக்கும் பெரும்பாலானவை போதிய ஆய்வு அனுபவ அறிவற்ற சொர்ப்பமே...
அது கூட அலோபதி மருத்துவ கூடாரம் செய்தது போன்று சித்த, ஆயுர்வேத மருத்துவ குறிப்புகளில் இருந்து மேலும் ஆய்வு செய்து, அதில் குறிப்பிட்ட ஒரு காம்பவுண்டை மட்டுமே பிரித்தெடுத்து சிந்தசைஸ் செய்து மருந்தாக வெளியிட்டது போன்று சித்த ஆயுர்வேத மருத்துவ ஆய்வில் போதிய முன்னேற்றம் இல்லையே!!! காரணம் மனப்பான்மை மற்றும் அணுகுமுறை பிரச்சினை.
சரி நாம இப்ப டெங்கே எனும் வைரஸ் காய்ச்சல பற்றி பார்ப்போம்.
டெங்கே எனும் வைரஸ் காய்ச்சல் எப்படி நம்மை தாக்குகிறது?
Dengue போன்ற வைரஸ் காய்ச்சலில், acute கடுமையான மற்றும் chronic நாள்பட்ட என்கிற இரண்டு வகையான பாதிப்பு நிலையை ஏற்படுத்துகிறது..
அதில் Acute நிலைக்கும் முந்தைய ஆரம்ப நிலையில்..
அதாவது febrile நிலை என்ற காய்ச்சலின் துவக்க நிலைக்கு முந்தைய ஒரு நாள்...
அதாவது இன்கியுபேஷன் பீரியட் என்று சொல்லப்படும்,
அதாவது ஏடிஸ் எஜிப்டை (aedes aegypti) அல்லது ஏடிஸ் அல்பொபிக்டஸ் (aedes albopictus) எனும் கொசு இனத்தின் பெண் கொசுக்கள் கடிப்பத்தின் மூலமாக நம்ம உடல் உள்ளுக்கு சென்ற வைரஸ் பன்மடங்காக பெருகிவரும் அந்த காலகட்டத்தின்...
துவக்க நாளில் கடுமையான காய்ச்சல் வரும் அது 24 மணிநேரம் கழித்து, சில சமயம் தன்னால் விட்டு வியர்வை வியர்க்கும், பார்ப்பதற்கு காய்ச்சல் விட்டது போன்றுதொரு ஒரு உணர்வும் தரும்...
ஆனால் 6 முதல் 12 மணிநேரம் கழித்து நம்ம உடம்பின் எதிர்ப்பு சக்தியானது தாக்கிய தாக்குதலை உணர்ந்து தனது முழு எதிர்ப்பு சக்தியை கொண்டு போரை மீண்டும் கிளப்பி தாக்குதலில் இரங்கும்.
அப்படியான நோய் எதிர்ப்பு தாக்குதல் காய்ச்சல் வந்து 5 முதல் 7 நாட்கள் வரை மிக வீரியமாக இருக்கும்.
இந்நிலையில் தான் மருத்துவர்கள் realtime RT-PCR (Reverse Transcription - Polymase Chain Reaction) இரத்த பரிசோதனையில் டெங்கே வைரஸ்ஸுக்கு பிரத்யேகமான fluorescent dye கொண்ட detector திரவத்தை செலுத்தி ஒலிரூட்ட செய்து ஊர்ஜிதம் செய்வார்கள். அதுவே 7 முதல் 12 நாட்கள் கழித்து மருத்துவரிடம் சென்றால் DENV IGm & DENV IGg மற்றும் RBC & WBC இரத்த அணுக்களின் எண்ணிக்கை டெஸ்ட் எடுத்து பார்ப்பார்கள்.
(குறிப்பு: டெங்கே பொதுவாக, குழந்தைகள், உடல் பலகீனமுறற கற்பினி தாய்மார்கள், மாதவிடாய் காரணத்தால் அதிக இரத்தம் இழந்த இரத்த சோகை உள்ள பெண்கள், உடல் பலம் தளர்ந்த முதியவர்கள் என இவர்களை தான் மிக எளிதாக தாக்கும்.)
ஜுரம் அல்லது காய்ச்சல் எனும் உடலில் சூடு எப்படி வருகிறது?
இந்நிலையில் தாக்குதலுக்கு உண்டான சூழ்நிலையை உணர்ந்து மூளையில் உள்ள ஹைப்போ தாலமஸ் என்ற பகுதியானது... Pyrogen என்கிற ஒன்றை வெளிப்படுத்தி உடம்பு சூட்டை அதிகரிக்க செய்யும் அப்படியான நிலையில் நாம் உடலில் உணரும் வெப்ப சூழல் தான் காய்ச்சல் என்பது... இது நோய் எதிர்ப்பு வீரியத்தை அதிகரிக்க இயற்கையின் பிரதிபலிப்பு.
மூளையில் உள்ள ஹைப்போ தாலமஸ் எனும் பகுதி தான் நமது உடம்பின் தட்பவெப்பத்தை கண்காணித்து சீரமைத்து கட்டுப்படுத்துகின்றது.
அதுவல்லாமல் இந்த ஹீலர் healers என்கிற பாஸ்கர் மற்றும் மதிவாணன் போன்ற மதி அற்றவர்கள் கூறுவது போன்று அசுத்தத்தை ஒர் இடத்தில் மற்றொரு இடத்துக்கு அகற்றுவதால் ஏற்படும் உராய்வு அடிப்படையில் ஏற்படும் சூடு அல்ல காய்ச்சல் என்பது.
ஆக அப்படியான நிலையில் உடம்பு சூட்டை அதிகரிக்க இரத்தத்தில் விடுக்கப்படும் பைரோஜன், இரண்டு வகைப்படும்
1. Endogenous (internal) pyrogen
2. Exogenous (external) pyrogen
இதில் நான் முதலாவதாக குறிப்பிடுள்ள எண்டோஜனஸ் பைரோஜன், நோய் எதிர்ப்பு செல்களால் உந்தப்பட்டு உருவாக்கப் படுகிறது.
பொதுவாக வைரஸ், பாக்டீரியா போன்றவை நோய் எதிர்ப்பு செல்களை தாக்கும் போது அந்த செல்கள், தனக்கு ஏற்பட்டுள்ள தாக்குதலை உடனே மூளைக்கு உணர்த்தி பைரொஜெனை இரத்தத்தில் செலுத்தி ஏனைய உறுப்புகளின் செயற்பாட்டை சற்று குறைத்துக் கொள்ளும் வகையில் சமிக்கை அனுப்பும்.
ஆனால் எக்சொஜனஸ் பைரோஜன் என்பது பெயரில் உள்ளது போன்று வெளியே இருந்து வரும் காரணிகளால் உந்தப்பட்டு காய்ச்சல் உந்தப்படும்.
ஆக மொத்தத்தில்... உங்களுக்கு புரியும்படியாக சொல்வதென்றால்...
எக்சொஜென் பைரோஜென் எனும் வெளிப்புற காரணிகளால் உருவான பைரோஜென்... நோய் எதிர்ப்பு செல்கள் மூலமாக எண்டோஜென் பைரோஜன்களை கொண்டு உடம்பு சூட்டை அதிகரிக்க செய்யும்.
இது வல்லாமல் நோய் கிருமிகளின் தாக்குதல் இல்லாத ஏனைய சுற்றுச்சூழல் தட்பவெப்ப சூழ்நிலைகளை கொண்டும் சருமத்தின் வாயிலாக, ஹைப்போ தாலமஸ் என்ற மூளையின் பகுதியானது தெர்மோஸ்டெட் போன்று வெட்ப மிகுதியான நேரத்தில் வியர்வையை கொண்டும், குளிர் மிகுதியான நேரத்தில் நடுக்கத்தை கொண்டும் உடலின் வெட்ப நிலையை சரிசெய்து தக்கவைத்துக் கொள்ள கட்டளை இடுகிறது, (இதற்கு பைரொஜெனை வெளிப்படுத்தாது.)
அது சரி... அப்போ உடலில் ஏற்கனவே நோய் கிருமி தாக்கப்பட்டு இருக்கும் சமயத்தில் ஹைப்போதலமஸ் ஏன் உடம்பை சூடேற்ற வேண்டும் என நீங்கள் நினைக்கலாம்...
அதற்கு முக்கிய காரணம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிவேகமாக செயற்படுத்த வைக்கவும், வெள்ளை அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கவும் தான்...
காய்ச்சல் அல்லது ஜுரம் என்பது நமது உடம்பின் இயறக்கையான நோய் எதிர்ப்பின் பிரதிபலிப்பு தான்.
நல்லது தானே அப்போ எதுக்கு மாத்திரை போட்டு கட்டுப்படுத்த பார்க்கிறோம் என்று உங்களுக்கு தோனலாம்..
அதற்கு முக்கிய காரணம் acute febrile period எனும் காய்ச்சல் நேரத்தில் நாம் எதிர்கொள்ளும் சோர்வு உடல் வலி போன்றவற்றை அனுபவித்து சகித்துக் கொள்ள முடியாத காரணத்தால் தான் நாம் காய்ச்சலுக்கு paracetamol மற்றும் acetaminophen எடுத்துக் கொள்கிறோம்.
(குறிப்பு: டெங்கே காய்ச்சல் உள்ளவர்கள் NSAID (Non Steroidal Anti Inflammatory Drug) வகை மாத்திரைகள் எனும் ibuprofen, Aspirin, Naproxen, Diclofenac எடுக்கவே கூடாது)
அது மட்டுமல்லாமல் காய்ச்சலில் அகப்பட்டுள்ள சமயத்தில் அது என்ன மாதிரியான வைரஸ் அல்லது பாக்டீரியா என்று கண்டறிந்து தகுந்த ஆண்டிபயாடிக் கொடுத்து நோய் எதிர்ப்பு சிகிச்சை செய்ய வேண்டும்.
அப்படி செய்யாவிடில் காய்ச்சலின் போது உடல் நலிவுற்ற நிலையில் அக்கிருமியின் வீரியமிக்க பக்க விளைவுகளால் பாரதூரமான பாதிப்புக்கு உள்ளாக நேரிடும் என்பதால் தான் சிகிச்சையின் போது காய்ச்சலை கட்டுக்கு கொண்டு வந்து உடலை தேற்றி அந்த கிருமியை தனித்து தாக்க முற்படுவார்கள்.
(குறிப்பு: டெங்கே வைரஸ் காய்ச்சலுக்கு தடுப்பூசி இல்லை)
டெங்கே வைரஸ் காய்ச்சலை பொருத்தமட்டில், எலும்பு மஜ்ஜை பாதிக்கப்பட்டு, இரத்த அணுக்கள் உற்பத்தி குறைவதும், இரத்தத்தில் சிகப்பு மற்றும் வெள்ளை அணுக்கள் சாகடிக்கப்பட்டு குறைவதும், அதனால் சன்னம் சன்னமாக இரத்த அணுக்கள் எண்ணிக்கை முற்றிலுமாக குறைந்து இரத்தம் உரையும் தன்மை இழந்து உடலில் இரத்த கசிவு hemorrhage ஏற்பட்டு இறக்கும் நிலை ஏற்படும் என்பதால் டெங்கே காய்ச்சலையும் அதற்கு காரணமான DENV 1,2,3,4 என்கிற நான்கு வகையான வைரஸ் ஏற்படுத்தும் இரத்த அணு குறைவு பாதிப்பையும் கட்டுக்குள் கொண்டுவர வேண்டும்.
டெங்கே காய்ச்சலுக்கு breakbone fever என்கிற மற்றொரு பெயரும் உண்டு.. காய்ச்சல் தாக்கப்பட்ட acute உச்சக்கட்ட நிலையில் எலும்பை நெரித்து முறிப்பது போன்ற வலியுடன் மூட்டு வலி, அடி வயிற்று வலி, தலை பாரம், கண் விழியை அங்கும் இங்கும் திருப்ப முடியாத அளவிற்கு கண்ணுக்கு பின்புறம் முழுவதுமாக வலிக்கும்.
இந்த டெங்கே வைரஸ்ஸில் நான்கு வகைகள் உண்டு...
அது DENV-1, DENV-2, DENV-3 மற்றும் DENV-4 என்பதாகும்.
சமீபத்தில் DENV-1 வந்து தாக்கப்பட்ட ஒருவரின் உடலில் முதல் 7 முதல் 12 நாட்கள் DENV1 IGm எனும் அதே வைரஸின் நோய் எதிர்ப்பு antibody மிகுந்து காணப்படும். அதுவே சிறிது நாட்கள் கழித்து DENV IGg எனும் immunoglobulin g ஆக் மாறி மாதக் கணக்கில் தங்கி இருந்து மீண்டும் DENV-1 எனும் அதே வைரஸை அண்ட விடாது தற்காக்கும்....
என்றாலும் அதே நபருக்கு DENV-2, 3, 4 தாக்க தக்க ஏதுவான susceptible நபராக மாறிவிடுகிறார்.
இந்நிலையில் அடுத்தடுத்து மீதமுள்ள 3 வகை வைரஸ்சில் ஏதாவது ஒன்றின் தாக்குதலுக்கு அவர் உள்ளாக நேரிட்டால், நமது நோய் எதிர்ப்பு சக்தி T cells ஆனது வைரஸின் வெளிப்புற தோற்றத்தை கன்டு ஏமாறி ஏற்கனவே வந்து தாக்கிய DENV-1 தான் எனக்கருதி ஏற்கனவே பதிவு செய்யப்பட்டு வைத்திருந்த அதன் antibodyயை கொண்டு எதிர்த்து ஏமாற்ந்து தோற்று போக... புதிதாக வந்துள்ள DENV-2 ன் தாக்குதல் பாதிப்பு மிக வேகமாக இருக்கும்.
இத்தகைய இந்த டெங்கே வைரசின் மாறுபடும் antigen antibody குனாதசியத்தால் தான் இதற்கு அலோபதியில் இன்னமும் மருந்துகள் கண்டுப்பிடிக்க முடியாமல் உள்ளது.
நிலவேம்பு எனும் சிறியாநங்கை ஆங்கிலத்தில் king of bitter எனும் andrographis paniculata கசாயம் கூட DENV-1 எனும் வைரஸை மட்டும் தான் 80% சதவிகிதம் கட்டுப்படுத்துமாம்...
அதுவே DENV-1 தாக்குதலுக்கு ஏற்கனவே உள்ளாகி உடல் தேர்ந்த நிலையில் DENV-2, DENV-3 மற்றும் DENV-4 போன்ற ஏனைய 3 வகை வைரஸ்களில் ஏதாவது ஒன்றில் மீண்டும் பாதிக்கப்பட்டால் நிலவேம்பு அவ்வளவாக உதவாது எனவே அம்மன் பச்சரிசி (euphorbia hirta Linn) போன்ற மூலிகை இழையை காய்ச்சி வடிகட்டி கூடுதல் மருந்தாக உட்கொள்ள அறிவுறுத்துகிறார்கள்.
அதுபோக பாகற்காய் (momordica charabtia), வேப்பிலை போன்றவையும் வைரஸ் காய்ச்சலுக்கு நல்ல மருந்தாக உள்ளது என்கிறார்கள், ஆனால் உலகளாவிய அளவில் இருக்கும் medical journal களில் இன்னமும் போதிய கிளினிக்கல் ஸ்டெடி வேண்டும் என்று மருத்துவ உலகத்தை கோருகிறார்கள்.
அதுபோக இரத்த அணுக்களை அதிகரிக்க பப்பாய பழ மரத்தின் இலைகளில் இருந்து எடுக்கப்படும் சாரு (எடுக்கப்படும் விதம் மிக முக்கியமாகும்) நல்ல ஊட்ட சத்தாக உள்ளது.
இதற்கு அலோபதி மெடிக்கல் ஜோர்னலில் நிருபிக்கபட்ட ஆய்வு கட்டுரை இருக்கு.
ஆக எல்லாவற்றுக்கும் மேலாக அனைத்து வகையான காய்ச்சலின் போதும் நிறைய தண்ணீர் அருந்த வேண்டும்.
உடல் சக்திக்கு புரத சத்து மிக்க (கோழி) நன்கு வேக வைத்த சூப்பை உணவாக உட்கொள்ளுதல் அவசியம். காய்ச்சலின் போது வாய் கசந்து இருக்கும் நிலையில் பொருட்படுத்தாது புரத சத்து எடுத்துக்கொள்வது அவசியம்.
அதர்கு முன்பாக....
மண்ணச்சநல்லூரில் அதிசியம் டெங்கு காய்ச்சலுக்கு தமிழ் பதி மருந்து, மருந்து சாப்பிட்ட ஒரு மணி நேரத்தில் காய்ச்சல் குறைகிறது மதுரை தமிழ் பதி சித்த மருத்துவர் கவிஞர் கலையரசன் மருந்து தருகிறாராம்!!?
என்ன ஆச்சரியம்?
சித்த மருத்துவ முறையில் எந்த நோயையும் உடனுக்குடன் சரியாக்க கூடாது, அப்படி உடனுக்குடன் குறுகிய கால அவகாசத்தில் குணமாக்குவது பெரிய ஆபத்து, சன்னம் சன்னமாக மெல்ல மெல்ல தான் குணமாக்க வேண்டும் என்பார்களே...
(இப்ப என்ன ஆச்சு? எப்படி இந்த திடீர் விதி மீறல்?)
இவர் மட்டும் எப்படி DHF dengue hemorrhage fever மற்றும் DSS dengue shock syndrome போன்றவற்றை ஒரு மணி நேரத்தில் குணமாக்கி காட்டுகிறார்? அதிசயம் தான்.
அப்படி அச்செய்தி உன்மையாக இருந்தால் அவர் கண்டுபிடித்துள்ள மருந்தின் தகவல்களை உலகறியச் செய்வாரா.... ? செய்ய மாட்டார்....
கடந்து சென்ற சமீப நூற்றாண்டுகளில் வாழ்ந்த அனேக சித்த மருத்துவர்கள் தமது அனுபவ அறிவை எல்லோருக்கும் சென்ற அடைய செய்யாமல் முக்கிய குறிப்புகளை குடும்ப இரகசியமாகவே பாதுகாத்து மூடி வைத்து மறைத்து அழித்தொழித்து விட்டார்கள் என்பது தான் எதார்த்த உண்மை...
இன்று எஞ்சி இருக்கும் பெரும்பாலானவை போதிய ஆய்வு அனுபவ அறிவற்ற சொர்ப்பமே...
அது கூட அலோபதி மருத்துவ கூடாரம் செய்தது போன்று சித்த, ஆயுர்வேத மருத்துவ குறிப்புகளில் இருந்து மேலும் ஆய்வு செய்து, அதில் குறிப்பிட்ட ஒரு காம்பவுண்டை மட்டுமே பிரித்தெடுத்து சிந்தசைஸ் செய்து மருந்தாக வெளியிட்டது போன்று சித்த ஆயுர்வேத மருத்துவ ஆய்வில் போதிய முன்னேற்றம் இல்லையே!!! காரணம் மனப்பான்மை மற்றும் அணுகுமுறை பிரச்சினை.
சரி நாம இப்ப டெங்கே எனும் வைரஸ் காய்ச்சல பற்றி பார்ப்போம்.
டெங்கே எனும் வைரஸ் காய்ச்சல் எப்படி நம்மை தாக்குகிறது?
Dengue போன்ற வைரஸ் காய்ச்சலில், acute கடுமையான மற்றும் chronic நாள்பட்ட என்கிற இரண்டு வகையான பாதிப்பு நிலையை ஏற்படுத்துகிறது..
அதில் Acute நிலைக்கும் முந்தைய ஆரம்ப நிலையில்..
அதாவது febrile நிலை என்ற காய்ச்சலின் துவக்க நிலைக்கு முந்தைய ஒரு நாள்...
அதாவது இன்கியுபேஷன் பீரியட் என்று சொல்லப்படும்,
அதாவது ஏடிஸ் எஜிப்டை (aedes aegypti) அல்லது ஏடிஸ் அல்பொபிக்டஸ் (aedes albopictus) எனும் கொசு இனத்தின் பெண் கொசுக்கள் கடிப்பத்தின் மூலமாக நம்ம உடல் உள்ளுக்கு சென்ற வைரஸ் பன்மடங்காக பெருகிவரும் அந்த காலகட்டத்தின்...
துவக்க நாளில் கடுமையான காய்ச்சல் வரும் அது 24 மணிநேரம் கழித்து, சில சமயம் தன்னால் விட்டு வியர்வை வியர்க்கும், பார்ப்பதற்கு காய்ச்சல் விட்டது போன்றுதொரு ஒரு உணர்வும் தரும்...
ஆனால் 6 முதல் 12 மணிநேரம் கழித்து நம்ம உடம்பின் எதிர்ப்பு சக்தியானது தாக்கிய தாக்குதலை உணர்ந்து தனது முழு எதிர்ப்பு சக்தியை கொண்டு போரை மீண்டும் கிளப்பி தாக்குதலில் இரங்கும்.
அப்படியான நோய் எதிர்ப்பு தாக்குதல் காய்ச்சல் வந்து 5 முதல் 7 நாட்கள் வரை மிக வீரியமாக இருக்கும்.
இந்நிலையில் தான் மருத்துவர்கள் realtime RT-PCR (Reverse Transcription - Polymase Chain Reaction) இரத்த பரிசோதனையில் டெங்கே வைரஸ்ஸுக்கு பிரத்யேகமான fluorescent dye கொண்ட detector திரவத்தை செலுத்தி ஒலிரூட்ட செய்து ஊர்ஜிதம் செய்வார்கள். அதுவே 7 முதல் 12 நாட்கள் கழித்து மருத்துவரிடம் சென்றால் DENV IGm & DENV IGg மற்றும் RBC & WBC இரத்த அணுக்களின் எண்ணிக்கை டெஸ்ட் எடுத்து பார்ப்பார்கள்.
(குறிப்பு: டெங்கே பொதுவாக, குழந்தைகள், உடல் பலகீனமுறற கற்பினி தாய்மார்கள், மாதவிடாய் காரணத்தால் அதிக இரத்தம் இழந்த இரத்த சோகை உள்ள பெண்கள், உடல் பலம் தளர்ந்த முதியவர்கள் என இவர்களை தான் மிக எளிதாக தாக்கும்.)
ஜுரம் அல்லது காய்ச்சல் எனும் உடலில் சூடு எப்படி வருகிறது?
இந்நிலையில் தாக்குதலுக்கு உண்டான சூழ்நிலையை உணர்ந்து மூளையில் உள்ள ஹைப்போ தாலமஸ் என்ற பகுதியானது... Pyrogen என்கிற ஒன்றை வெளிப்படுத்தி உடம்பு சூட்டை அதிகரிக்க செய்யும் அப்படியான நிலையில் நாம் உடலில் உணரும் வெப்ப சூழல் தான் காய்ச்சல் என்பது... இது நோய் எதிர்ப்பு வீரியத்தை அதிகரிக்க இயற்கையின் பிரதிபலிப்பு.
மூளையில் உள்ள ஹைப்போ தாலமஸ் எனும் பகுதி தான் நமது உடம்பின் தட்பவெப்பத்தை கண்காணித்து சீரமைத்து கட்டுப்படுத்துகின்றது.
அதுவல்லாமல் இந்த ஹீலர் healers என்கிற பாஸ்கர் மற்றும் மதிவாணன் போன்ற மதி அற்றவர்கள் கூறுவது போன்று அசுத்தத்தை ஒர் இடத்தில் மற்றொரு இடத்துக்கு அகற்றுவதால் ஏற்படும் உராய்வு அடிப்படையில் ஏற்படும் சூடு அல்ல காய்ச்சல் என்பது.
ஆக அப்படியான நிலையில் உடம்பு சூட்டை அதிகரிக்க இரத்தத்தில் விடுக்கப்படும் பைரோஜன், இரண்டு வகைப்படும்
1. Endogenous (internal) pyrogen
2. Exogenous (external) pyrogen
இதில் நான் முதலாவதாக குறிப்பிடுள்ள எண்டோஜனஸ் பைரோஜன், நோய் எதிர்ப்பு செல்களால் உந்தப்பட்டு உருவாக்கப் படுகிறது.
பொதுவாக வைரஸ், பாக்டீரியா போன்றவை நோய் எதிர்ப்பு செல்களை தாக்கும் போது அந்த செல்கள், தனக்கு ஏற்பட்டுள்ள தாக்குதலை உடனே மூளைக்கு உணர்த்தி பைரொஜெனை இரத்தத்தில் செலுத்தி ஏனைய உறுப்புகளின் செயற்பாட்டை சற்று குறைத்துக் கொள்ளும் வகையில் சமிக்கை அனுப்பும்.
ஆனால் எக்சொஜனஸ் பைரோஜன் என்பது பெயரில் உள்ளது போன்று வெளியே இருந்து வரும் காரணிகளால் உந்தப்பட்டு காய்ச்சல் உந்தப்படும்.
ஆக மொத்தத்தில்... உங்களுக்கு புரியும்படியாக சொல்வதென்றால்...
எக்சொஜென் பைரோஜென் எனும் வெளிப்புற காரணிகளால் உருவான பைரோஜென்... நோய் எதிர்ப்பு செல்கள் மூலமாக எண்டோஜென் பைரோஜன்களை கொண்டு உடம்பு சூட்டை அதிகரிக்க செய்யும்.
இது வல்லாமல் நோய் கிருமிகளின் தாக்குதல் இல்லாத ஏனைய சுற்றுச்சூழல் தட்பவெப்ப சூழ்நிலைகளை கொண்டும் சருமத்தின் வாயிலாக, ஹைப்போ தாலமஸ் என்ற மூளையின் பகுதியானது தெர்மோஸ்டெட் போன்று வெட்ப மிகுதியான நேரத்தில் வியர்வையை கொண்டும், குளிர் மிகுதியான நேரத்தில் நடுக்கத்தை கொண்டும் உடலின் வெட்ப நிலையை சரிசெய்து தக்கவைத்துக் கொள்ள கட்டளை இடுகிறது, (இதற்கு பைரொஜெனை வெளிப்படுத்தாது.)
அது சரி... அப்போ உடலில் ஏற்கனவே நோய் கிருமி தாக்கப்பட்டு இருக்கும் சமயத்தில் ஹைப்போதலமஸ் ஏன் உடம்பை சூடேற்ற வேண்டும் என நீங்கள் நினைக்கலாம்...
அதற்கு முக்கிய காரணம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிவேகமாக செயற்படுத்த வைக்கவும், வெள்ளை அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கவும் தான்...
காய்ச்சல் அல்லது ஜுரம் என்பது நமது உடம்பின் இயறக்கையான நோய் எதிர்ப்பின் பிரதிபலிப்பு தான்.
நல்லது தானே அப்போ எதுக்கு மாத்திரை போட்டு கட்டுப்படுத்த பார்க்கிறோம் என்று உங்களுக்கு தோனலாம்..
அதற்கு முக்கிய காரணம் acute febrile period எனும் காய்ச்சல் நேரத்தில் நாம் எதிர்கொள்ளும் சோர்வு உடல் வலி போன்றவற்றை அனுபவித்து சகித்துக் கொள்ள முடியாத காரணத்தால் தான் நாம் காய்ச்சலுக்கு paracetamol மற்றும் acetaminophen எடுத்துக் கொள்கிறோம்.
(குறிப்பு: டெங்கே காய்ச்சல் உள்ளவர்கள் NSAID (Non Steroidal Anti Inflammatory Drug) வகை மாத்திரைகள் எனும் ibuprofen, Aspirin, Naproxen, Diclofenac எடுக்கவே கூடாது)
அது மட்டுமல்லாமல் காய்ச்சலில் அகப்பட்டுள்ள சமயத்தில் அது என்ன மாதிரியான வைரஸ் அல்லது பாக்டீரியா என்று கண்டறிந்து தகுந்த ஆண்டிபயாடிக் கொடுத்து நோய் எதிர்ப்பு சிகிச்சை செய்ய வேண்டும்.
அப்படி செய்யாவிடில் காய்ச்சலின் போது உடல் நலிவுற்ற நிலையில் அக்கிருமியின் வீரியமிக்க பக்க விளைவுகளால் பாரதூரமான பாதிப்புக்கு உள்ளாக நேரிடும் என்பதால் தான் சிகிச்சையின் போது காய்ச்சலை கட்டுக்கு கொண்டு வந்து உடலை தேற்றி அந்த கிருமியை தனித்து தாக்க முற்படுவார்கள்.
(குறிப்பு: டெங்கே வைரஸ் காய்ச்சலுக்கு தடுப்பூசி இல்லை)
டெங்கே வைரஸ் காய்ச்சலை பொருத்தமட்டில், எலும்பு மஜ்ஜை பாதிக்கப்பட்டு, இரத்த அணுக்கள் உற்பத்தி குறைவதும், இரத்தத்தில் சிகப்பு மற்றும் வெள்ளை அணுக்கள் சாகடிக்கப்பட்டு குறைவதும், அதனால் சன்னம் சன்னமாக இரத்த அணுக்கள் எண்ணிக்கை முற்றிலுமாக குறைந்து இரத்தம் உரையும் தன்மை இழந்து உடலில் இரத்த கசிவு hemorrhage ஏற்பட்டு இறக்கும் நிலை ஏற்படும் என்பதால் டெங்கே காய்ச்சலையும் அதற்கு காரணமான DENV 1,2,3,4 என்கிற நான்கு வகையான வைரஸ் ஏற்படுத்தும் இரத்த அணு குறைவு பாதிப்பையும் கட்டுக்குள் கொண்டுவர வேண்டும்.
டெங்கே காய்ச்சலுக்கு breakbone fever என்கிற மற்றொரு பெயரும் உண்டு.. காய்ச்சல் தாக்கப்பட்ட acute உச்சக்கட்ட நிலையில் எலும்பை நெரித்து முறிப்பது போன்ற வலியுடன் மூட்டு வலி, அடி வயிற்று வலி, தலை பாரம், கண் விழியை அங்கும் இங்கும் திருப்ப முடியாத அளவிற்கு கண்ணுக்கு பின்புறம் முழுவதுமாக வலிக்கும்.
இந்த டெங்கே வைரஸ்ஸில் நான்கு வகைகள் உண்டு...
அது DENV-1, DENV-2, DENV-3 மற்றும் DENV-4 என்பதாகும்.
சமீபத்தில் DENV-1 வந்து தாக்கப்பட்ட ஒருவரின் உடலில் முதல் 7 முதல் 12 நாட்கள் DENV1 IGm எனும் அதே வைரஸின் நோய் எதிர்ப்பு antibody மிகுந்து காணப்படும். அதுவே சிறிது நாட்கள் கழித்து DENV IGg எனும் immunoglobulin g ஆக் மாறி மாதக் கணக்கில் தங்கி இருந்து மீண்டும் DENV-1 எனும் அதே வைரஸை அண்ட விடாது தற்காக்கும்....
என்றாலும் அதே நபருக்கு DENV-2, 3, 4 தாக்க தக்க ஏதுவான susceptible நபராக மாறிவிடுகிறார்.
இந்நிலையில் அடுத்தடுத்து மீதமுள்ள 3 வகை வைரஸ்சில் ஏதாவது ஒன்றின் தாக்குதலுக்கு அவர் உள்ளாக நேரிட்டால், நமது நோய் எதிர்ப்பு சக்தி T cells ஆனது வைரஸின் வெளிப்புற தோற்றத்தை கன்டு ஏமாறி ஏற்கனவே வந்து தாக்கிய DENV-1 தான் எனக்கருதி ஏற்கனவே பதிவு செய்யப்பட்டு வைத்திருந்த அதன் antibodyயை கொண்டு எதிர்த்து ஏமாற்ந்து தோற்று போக... புதிதாக வந்துள்ள DENV-2 ன் தாக்குதல் பாதிப்பு மிக வேகமாக இருக்கும்.
இத்தகைய இந்த டெங்கே வைரசின் மாறுபடும் antigen antibody குனாதசியத்தால் தான் இதற்கு அலோபதியில் இன்னமும் மருந்துகள் கண்டுப்பிடிக்க முடியாமல் உள்ளது.
நிலவேம்பு எனும் சிறியாநங்கை ஆங்கிலத்தில் king of bitter எனும் andrographis paniculata கசாயம் கூட DENV-1 எனும் வைரஸை மட்டும் தான் 80% சதவிகிதம் கட்டுப்படுத்துமாம்...
அதுவே DENV-1 தாக்குதலுக்கு ஏற்கனவே உள்ளாகி உடல் தேர்ந்த நிலையில் DENV-2, DENV-3 மற்றும் DENV-4 போன்ற ஏனைய 3 வகை வைரஸ்களில் ஏதாவது ஒன்றில் மீண்டும் பாதிக்கப்பட்டால் நிலவேம்பு அவ்வளவாக உதவாது எனவே அம்மன் பச்சரிசி (euphorbia hirta Linn) போன்ற மூலிகை இழையை காய்ச்சி வடிகட்டி கூடுதல் மருந்தாக உட்கொள்ள அறிவுறுத்துகிறார்கள்.
அதுபோக பாகற்காய் (momordica charabtia), வேப்பிலை போன்றவையும் வைரஸ் காய்ச்சலுக்கு நல்ல மருந்தாக உள்ளது என்கிறார்கள், ஆனால் உலகளாவிய அளவில் இருக்கும் medical journal களில் இன்னமும் போதிய கிளினிக்கல் ஸ்டெடி வேண்டும் என்று மருத்துவ உலகத்தை கோருகிறார்கள்.
அதுபோக இரத்த அணுக்களை அதிகரிக்க பப்பாய பழ மரத்தின் இலைகளில் இருந்து எடுக்கப்படும் சாரு (எடுக்கப்படும் விதம் மிக முக்கியமாகும்) நல்ல ஊட்ட சத்தாக உள்ளது.
இதற்கு அலோபதி மெடிக்கல் ஜோர்னலில் நிருபிக்கபட்ட ஆய்வு கட்டுரை இருக்கு.
ஆக எல்லாவற்றுக்கும் மேலாக அனைத்து வகையான காய்ச்சலின் போதும் நிறைய தண்ணீர் அருந்த வேண்டும்.
உடல் சக்திக்கு புரத சத்து மிக்க (கோழி) நன்கு வேக வைத்த சூப்பை உணவாக உட்கொள்ளுதல் அவசியம். காய்ச்சலின் போது வாய் கசந்து இருக்கும் நிலையில் பொருட்படுத்தாது புரத சத்து எடுத்துக்கொள்வது அவசியம்.
இப்படிக்கு,
நியூயார்க் நகரத்திலிருந்து,
நாகூர் தீன்
Twitter: @nagoredeen
Facebook: http://www.Facebook.com/nagoredeen
website: http://www.nagoredeen.com
நியூயார்க் நகரத்திலிருந்து,
நாகூர் தீன்
Twitter: @nagoredeen
Facebook: http://www.Facebook.com/nagoredeen
website: http://www.nagoredeen.com