அபு பக்கர் சித்தீக் (ரலி) அவர்களுக்கு ஆறு குழந்தைகள் அதில் மூன்று மகன்கள் மூன்று மகள்கள்.
முதல் திருமணம்:
- அஸ்மா
- அப்துல்லாஹ்
குதைலா இஸ்லாத்தை ஏற்கவில்லை, அபு பக்கரும் குதைலாவை விவாகரத்து செய்து விடுகிறார்கள். ஹிஜ்ராத்துக்கு பிந்திய ஒரு காலகட்டத்தில் குதைலா மதீனாவுக்கு தனது மகள் அஸ்மாவை (ரலி) பார்க்க வருகிறார்... அஸ்மாவும் நபி(ஸல்) அவர்களிடம் தனது தாயை சந்திக்கலாமா தன்னுடன் தங்கவைக்கலாமா என்று கேட்டார்கள் அதற்க்கு நபி (ஸல்) அவர்களும் அனுமதி தந்தார்கள்.
இரண்டாம் திருமணம்:
- அப்துர்ரஹ்மான் மற்றும்
- ஆய்ஷாவை ஈன்று எடுக்கிறார்.
அபு பக்கர் (ரலி) இஸ்லாத்தை தழுவியதை தொடர்ந்து இவரும் இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாக ஏற்கிறார். மதீனாவில் மரணித்து போகிறார்கள். நபி(ஸல்) அவர்கள் ஜனாஸா தொழுகை நடத்திக் கொடுத்து அவர்களை சிறப்பிக்கிறார்கள். அதுவல்லாமல் "உங்களில் யாராவது சொர்கத்து அழகியை பார்க்க வேண்டுமெனில் உம்மு ரூமனை பாருங்கள் என்று கூறியும் சிறப்பித்தார்கள்.
மூன்றாம் திருமணம்:
அபு பக்கர் அவர்களுக்கு,
- உம்ம குல்சும்
என்ற மகளை உண்டாகி அவரது மரணத்திற்கு பின் ஈன்று எடுக்கிறார்.
நான்காம் திருமணம்:
அதை தொடர்ந்து அபூபக்கருக்காக ஒரு ஆண் பிள்ளையை பெற்று எடுக்கிறார்கள்...
- முஹம்மத் பின் அபு பக்கர்
அஸ்மாவின் இரண்டு மகன்களுக்குமே "முஹம்மத்" என்ற பெயர் இடுகிறார்கள், ஒருவர் ஹாஃப்பர் (ரலி) அவர்களின் மகனார் மற்றொருவர் அபு பக்கர் (ரலி) அவர்களின் மகனார்.
அபு பக்கரின் மறைவுக்கு பின் அவரது விருப்பத்துக்கு இணங்க அஸ்மா (ரலி) தான் அபு பக்கரின் (உடலை) ஜனாஸாவை நல்லடக்கத்துக்கு எடுத்து செல்ல தயார் செய்கிறார்கள்.
அதன் பின்னர் சிறுது மாதம் கழித்து அலி பின் அபு தாலிப் (ரலி) அவர்களை திருமணம் செய்து "எஹ்யா" என்ற மகனை அவருக்காக ஈன்று எடுக்கிறார்கள்.
மகன்கள்:
- அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் (ரலி):
வரலாற்று குறிப்புகள் பிரகாரம் அபு பக்கர் அவர்களின் மூத்த மகன், ஆயிஷா (ரலி) அவர்களின் சகோதரர் அப்துர்ரஹ்மான் இஸ்லாத்தை தழுவி மதீனாவுக்கு வரவில்லை. பத்ரு போரில் மக்கத்து குறைஷிகளுடன் சேர்ந்து போரிட்டு பின்னர் சில காலம் கழித்து ஹுதைபியா உடன்படிக்கையின் போது இஸ்லாத்தை ஏற்றார். பின்னர் பல போர்களில் பங்குபெற்றார்... எமாமா போரில் பங்குபெற்று நான் தான் அடுத்த இறைதூதர் என்று பிரகடனம் செய்த முசைலமாவை முறியடிக்க போரிட்டு முசைலமாவின் போர் தளபதி மஹக்கம என்பவரை போரில் வீழ்த்தி கொலைசெய்தார்.
- அப்துல்லாஹ் பின் அபூபக்கர் (ரலி):
அபு பக்கர் (ரலி) அவர்களின் இரண்டாவது மகனான அப்துல்லாஹ் குதைலாவுக்கு பிறந்தவர் ஆதிகா என்ற அழகிய பெண்ணை திருமணம் முடித்து இருந்தார்... ஆதிகா என்பவர் zசெய்த பின் ஆமிர் பின் நவ்ஃபல் என்பரின் மகள் உமர் (ரலி) அவர்களின் கசின். மிக பெரிய பேர் அழகியாக இருந்தார். அப்துல்லாவும் ஆதிகாவின் அழகில் மயங்கி மார்க்க கடமைகள் நிறைவேற்றாதவாரக இருந்து வந்தார். தகப்பனாராகிய அபு பக்கரும் அவரை தொடர்ந்து கடுமையாக எச்சரித்தும் வந்தார் ஆனாலும் அப்துல்லாஹ் ஆதீகாவின் மீது கொண்டிருந்த காதல் மயக்கத்தில் இருந்து மீண்டு வரா முடியாமல் மூழ்கி இருக்கவே இறுதியாக தனது மகனிடம் மூன்றே நாட்களில் நீ ஆதிகாவை விவாகரத்து செய்து விடவேண்டும் என்பதாக கண்டிப்புடன் கூறிவிடுகிறார்.அதையடுத்து மகனார் அப்துல்லாஹ்வும் விவாகரத்து செய்து விடுகிறார்க ஆனால் புத்தி பேதளித்தவராக சதா ஆதிகாவின் நினைப்பிலேயே உண்ணாமல் பருகாமல் உறங்காமல் அதிகாவின் இழப்பை நினைத்து அழுது புலம்பியவராக இருக்கிறார். இது பின்னர் நபி (ஸல்) அவர்களின் கவனத்துக்கு வரவே, திருமண விவாகரத்தை ரத்து செய்து இருவரையும் இணைத்து வைக்கிறார்கள். அது முதல் அப்துல்லாஹ் கொண்டிருந்த அதிகா மீதான காதல் தனது மார்க்க கடமைகளில் குறிக்கிடாமல் மிக கவனத்துடன் பார்த்துக்கொண்டார் என்ற சரித்திர குறிப்புகள் இருக்கிறது... பின்னர் அப்துல்ல்லாஹ் பின் அபு பக்கர் பல போர்களில் கலந்துக்கொள்கிறார் தாயிஃப் போரில் காயப்பட்டு 633 வருடம் இறந்து போகிறார். அதன் பிறகு அபு பக்கர் கலிபாவாக இருந்த முதல் வருடம் ஆதிகாவை உமர் (ரலி) அவர்கள் மறுமணம் செய்துக் கொள்கிறார்கள்.
- முஹம்மத் இப்ன் அபூபக்கர்:
முஹம்மத் பின் அபு பக்கருக்கு இரண்டு அல்லது மூன்று வயதாக இருக்கும்போதே அபு பக்கர் (ரலி) அவர்கள் இறந்து விடுகிறார்கள்.அலி (ரலி) அவர்கள் முஹம்மத் பின் அபுபக்கரை இரண்டு அல்லது மூன்று வயது சிறு கைக்குழந்தையாக இருக்கும் போதிலிருந்தே தத்தெடுத்து பிரியமுடன் வளர்க்கிறார்கள்...
இந்த முஹம்மத் இப்னு அபு பக்கர் தான் பின்னர் காலத்தில் எகிப்து ஆளுனர் பற்றி உஸ்மான் (ரலி) அவர்களுடன் புகார் சொல்ல்கிறார், உஸ்மான் (ரலி) அவர்கள்
நடவடிக்கை தனக்கு தோதாக திருப்திகரமாக நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால் எகிப்தில் இருந்து 700 பேர் கொண்ட கிளர்ச்சியாளர்களை வரவழைத்து நீங்களே கேளுங்க என்றவாறு வரவழைத்து 40 நாட்கள் முற்றுகைக்கு பின்னர் கலீபா உஸ்மான் கொலை செய்யப்பட்டார்கள்.
அலி (ரலி) அவர்களின் செல்லப்பிள்ளையாக இருக்கிறார் உஸ்மான் (ரலி) அவர்களின் படுகொலைக்கு பின்னர் பின்னர் கலிபாவாக ஆன அலி(ரலி) அவர்கள் முஹம்மத் பின் அபு பக்கர எகிப்து பிராந்தியத்தின் ஆளுனராக நியமிக்கிறார்கள் பின்னர் அமர் பின் ஆஸ் (ரலி) அவர்களால் முஆவியா (ரலி) அவர்களின் கட்டளை அடிப்படையில் போரிட்டு வீழ்த்தி கைப்பற்றப்பட்டு கைது செய்யப்பட்டு பின்னர் கொல்லப்படுகிறார்.
மகள்கள்:
- அஸ்மா (ரலி):
அபு பக்கரின் மகள்களில் மூத்தவர் அஸ்மா (ரலி) பின்னர் இஸ்லாத்தை அபு பக்கருடன் ஏற்க மறுத்த குதைலா என்ற அபு பக்கரின் மனைவிக்கு பிறந்தவர். நபி (ஸல்) அவர்களின் ஹிஜ்ரத்தின் போது அபூபக்கர் (ரலி) அவர்களுடன் குகைக்குள் தங்கி இருந்து போது அஸ்மா தான் இரவு நேரத்தில் இருவருக்கும் உணவு கொண்டு வந்து கொடுப்பவராக இருந்தார்.நபி (ஸல்) அவர்களும் அபு பக்கர் (ரலி) அவர்களும் குகையை விட்டு புறப்பட தயாராகும்போது அஸ்மா தனது ஆடையில் பெல்ட் போல நீளமான துணியை கிழித்து இரண்டு பெல்ட் போன்று கட்டி தந்தார். இந்த சிறந்த யோசனை மற்றும் யுக்தியை நபி(ஸல்) அவர்கள் பாராட்டி "இரட்டை பெல்ட்டுக்கு சொந்தக்காரர்" என்று சிறப்பிச்சு வர்ணித்தார்கள்.
நபி (ஸல்) அவர்களின் மச்சான் ஜுபைரை மணமுடித்து இருந்தார் அஸ்மா. இருவருமாக மதீனாவுக்கு ஹிஜ்ரத் செய்த பின் முஸ்லீம்கள் மத்தியில் முதலாவதாக ஒரு குழந்தையை ஈன்று அவருக்கு அப்துல்லாஹ் என்று பெயரிட்டார்.
கர்பலாவின் பெரும் துயரத்துக்கு பின்னர் அப்துல்லாஹ் மக்காவில் இருந்தவண்ணம் தன்னை தானே கலீபாவாக அறிவித்ததை அடுத்து உமையாக்கள் மக்காவை நோக்கி படையெடுத்தார்கள்.
அதை தொடர்ந்து அப்துல்லாஹ் தனது என்பது வயதான தாயாரிடம் ஆலோசனை செய்கிறார்கள்...
அதற்கு அஸ்மா (ரலி) அவர்கள் உனது நோக்கம் உண்மையானது உன்னதமானது என்று நீ நம்பிக்கை கொண்டிருக்கும் பட்சத்தில் அவர்களை எதிர்த்து போரிட்டு மரணிக்கவும் தயாராக இருக்கவேண்டும், அப்படியல்லாமல் உனது நோக்கம் வெறும்ந்தா உலக ஆதாயமாக இருக்குமேயானால் உனது எதிரிகளுடன் நீ சமரசம் செய்துக்கொள் என்பதாக கூறி இருக்கிறார்கள்.
அஸ்மா விற்கும் ஜுபைருக்கும் ஹிஜ்ரி முதல் ஆண்டில் பிறந்த அப்துல்லாஹ் பின் ஜுபைர் (ரலி) அவர்கள் கொலைசெய்யப்பட்டு அவரது உடலை பொதுமக்கள் பார்வைக்கு தூக்கில் இட்டிருந்தார்கள்.
- ஆயிஷா (ரலி):
ஆயிஷா (ரலி) அவர்களை பற்றி தான் நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான் நபி (ஸல்) அவர்களின் இளம் மனைவி, மிக சிறிய வயதிலேயே விதவையாகியவர். நிறையபல ஹதீஸ்களை நமக்கு பாடமாக கற்றுகொடுத்தவர்.... முஸ்லீம்கள் மத்தியில் மிகுந்த செல்வாக்கு மிக்கவர்.