Saturday, September 16, 2017

அரசாங்க ஆசிரியர்களை நோக்கி "நீங்கள் வெட்கப்பட வேண்டாமா?" ~ நீதியரசர் N கிருபாகரன் தகுந்த கேள்வி




வெறுமனே ஐந்து பேரை மட்டும் தான் மருத்துவ படிப்புக்கான நுழைவு தேர்வில் தேர்ச்சி செய்ய முடிந்தது என்பதை நினைத்து  போராட்டத்தில் ஈடுபடும் 43,000 அரசாங்க ஆசிரியர்கள் வெட்கப்பட வேண்டாமா? என்று நீதியரசர் N கிருபாகரன் கேள்வி எழுப்பினார்.

சமீபத்தில் நடந்து முடிந்த NEET எனும்  மருத்துவத்துவ படிப்பிற்கான நுழைவுத்தேர்வில்,
தமிழ்நாடு ஸ்டேட் போர்ட் பாடதிட்ட அடிப்படையில் பயின்ற
  • அரசு நிதிவுதவி பெறும் தனியார் நிர்வாக அடிப்படையில் இயங்கும் பள்ளிக்கூட மாணவர்கள் மற்றும், 
  • அதே ஸ்டேட் போர்ட் பாடதிட்ட அடிப்படையில் இயங்கும் தனியார் சுயநிதி பள்ளிக்கூட மாணவர்கள்.
என நுழைவுத்தேர்வு எழுதிய 63% Tamil Nadu State Board education மாணவர்கள் தேர்ச்சி பெற்றதில் வெறும் 5 பேர் மட்டுமே முழு இலவச அரசு பள்ளிக்கூட மாணவர்களாகும்...

அவ்வகையில் வெறும் சம்பளம் மற்றும் பென்ஷன் திட்டத்தில் குறியாக இருக்கும் இந்த ஆசிரியர்களின் உத்தியோக performance responsibility மற்றும் accountability பொறுப்புணர்வு எங்கே என்று கேட்டதில் என்ன தவறு?

வரி செலுத்தும் பொதுமக்களாகிய நாங்களும் உங்களை தட்டிக்  கேட்க முடியாது, நீதிபதிகள் கேட்டலும் அவரை கொச்சை படுத்தி அசிங்கப்படுத்தி அடையாளம் காட்டிக்கொள்ளாமல் வசை பாடினால் அப்ப உங்களை பணிநீக்கம் செய்வதில் தவறேதும் இல்லை என்றே தோன்றுகிறது.

இப்படிக்கு
சமூக அக்கறையுடன்
நாகூர் தீன்
16/09/2017

ஜுரம் வந்தால் உடம்பு ஏன் சூடாகிறது?

இக்கட்டுரையில் டெங்கு காய்ச்சல் தொடர்பாகவும் , அதற்குரிய இயற்க்கை மருத்துவம் தொடர்பாகவும், அலோபதி தொடர்பாகவும் எழுதி இருக்கிறேன்... அதர...