Thursday, September 21, 2017

ஹிந்த் பின்த் அவ்ஃப் என்கிற மதிப்பிற்குறிய மாமியார்

குவாலா என்கிற ஹிந்த் பின்த் அவ்ஃப் என்கிறவர்கள் நபி (ஸல்) அவர்களின் மாமியார்.

 இவர்கள் பிறந்த வருடமும் மரணித்த வருடமும் தெரியவில்லை.

அவர்களுக்கு பல சஹாபா பெண்மானி மற்றும் நபி தோழர்களின் தாய் என்கிற போற்றுதலுக்கு சொந்தக்காரர்.

இந்த மூதாட்டிக்கு ஒன்றன் பின் ஒன்றாக கணவர்கள் இறந்து போகவே அடுத்தடுத்து நான்கு திருமணங்கள் முடிகிறது.

அதன் மூலம் இவர்கள் 9 பிள்ளைகளை ஈன்று எடுக்கிறார்.

அதுவல்லாமல் இவர்களது கணவரின் மற்றொரு மனைவியின் 3 பிள்ளைகளையும் எடுத்து வளர்க்கிறார்கள்.


முதல் திருமணம்:


அவர்களுக்கு முதலாவதாக அல்ஜாஸி அல் zஜுபைதி என்பவருடன் திருமணம் முடிந்து அவருக்காக

1. மஹ்மியாஹ் இப்ன் அல்ஜாஸி அல் zஜுபைதி
என்ற மகன் பிறக்கிறார்.

இரணடாவது திருமணம்:


அவரது முதலாவது கணவர் இறந்து போகவே அல் ஹாரித் இப்ன் ஹzசம் என்கிறவரை திருமணம் செய்கிறார்கள்.

அல் ஹாரித் என்பவருக்கு 2  மகள் மற்றும் 2 மகன்களை பெற்று எடுக்கிறார்கள்... அது போக அவரது மற்றொரு மனைவியின் 3 பெண் பிள்ளைகளையும் குவாலா தான் எடுத்து வளர்க்கிறார்கள்.


2. லுபாபா பின்த் அல் ஹாரித்
லுபாபா என இருவர் இக்குடும்பத்தில் இருப்பதால் இவர் முத்த லுபாபா என அழைக்கப்பட்டார் பின்னர் உம்மு ஃபளுள் என விளங்கப்பட்டார்.

இவர் நபி (ஸல்) அவர்களின் சிறிய தந்தையான அப்பாஸ் இப்ன் அப்தல் முத்தலீப் இன் மனைவி,

நபி(ஸல்) அவர்களுக்கு அருகாமையில் இருந்து உதவியாக  பணிவிடைகள் செய்து வந்த இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் தாய்.

3.  பர்ரா பின்த் அல் ஹாரித் (மைமூனா)

நபி (ஸல்) அவர்களின் கடைசி மனைவி.

ஹுதைபியா உடன்படிக்கை முடிந்த அடுத்த வருடம் அதாவது  ஹிஜ்ரி 7 ஆம் வருடம் துல்காயிதா மாதம் நபி(ஸல்) உம்ராவிற்கு வந்திருந்த சமயம்.

பர்ரா அவர்கள் தனது சகோதரி லுபாபா (அப்பாஸ் (ரலி) மனைவி) இடத்தில் தான் நபி (ஸல்) அவர்களை திருமணம் முடிக்க ஆசை படுவதாக கூற...

அதை தொடர்ந்து சிறிய தந்தை அப்பாஸ் (ரலி) தனது அண்ணன் மகனான நபி (ஸல்) அவர்களிடத்தில் வலியுறுத்தி வற்புறுத்த உம்ராவில் இருந்த திரும்பிய நபி(ஸல்) அவர்கள் மக்காவிற்கு திரும்பும் வேலையில் திருமணம் முடித்து விருந்து கொடுக்கிறார்கள்.

பின்னர் பர்ரா பின்த் அல் ஹாரித் என்ற அவரது பெயரை மைமூனா The Blessed என்று பெயர் மாற்றம் செய்து வைக்கிறார்கள்.

காலித் பின் வலீத் (ரலி) அவர்களின் சிறிய தாயான மைமூனா (ரலி) அவர்களின் திருமணம் அவரை இஸ்லாத்தை ஏற்க செய்தது... காலித் பின் வலீத் அப்பாஸ் (ரலி) அவர்களுக்கு  மிக பிரயமாகவும் மிக நெருக்கமாகவும் இருந்தார் என்பதும் குறிப்பிட தக்கது.

4. அல் சாயிப் இப்ன் அல் ஹாரித் (மகன்)
5. கதன் இப்ன் அல் ஹாரித் (மகன்)

அதுவல்லாமல் ஃபக்ஹிதா பின்த் அமீர் இப்ன் முஆதிப் இப்ன் மாலிக் என்கிற தனது கணவரின் மற்றொமொரு மனைவியின் பிள்ளைகள்

1. லுபாபா பின்த் ஹாரித் (சிறிய லுபாபா)
லய்லா அல்லது அஸ்மா என்றும் அழைக்கப்பட்டார். இவர் வலீத் பின் முகீரா என்கிற காலித் பின் வலீத் (ரலி) வின் தகப்பனாரை திருமணம் செய்துக்கொண்டார்.

வலீத் பின் முகீரா என்கிற கிழவன் பொல்லா பெருமைக்கொண்ட பெரும் பணக்கார கிழவன், 95 வயதுவரை வாழ்ந்து இறக்கும் போதும் சண்டைய வளர்த்துவிட்டு தான் இறந்து போனான்.

2. ஹுசைலா பின்த் அல் ஹாரித்
3. கோர்ரா பின்த் அல் ஹாரித்.

மூன்றாம் திருமணம்: 

சிறிய லுபாபாவான காலித் பின் வலீதின் தாய் 3 வயதாக இருக்கும் போதே அல் ஹாரித் இறந்து விடுகிறார். அதையடுத்து குஸைமா இப்ன் அல் ஹாரித் என்கிறவரை திருமணம் முடிக்கிறார் குவாலா.

அவர் மூலியமாக,

6. சைனப் பின்த் குஸைமா (ரலி) அவர்கள் பிறக்கிறார்கள்...
இவர்களும்  நபி (ஸல்) அவர்களின் ஹிஜ்ரி 4 ல் திருமணம் முடிக்கப்பட்ட ஐந்தாவது மனைவி  என்பது குறிப்பிட தக்கது.

(ஹஃப்ஸா பின்த் உமர் (ரலி) என்ற நபி(ஸல்) அவர்களின் மற்றொரு மனைவியை போன்றே பத்ரு போரில் விதைவையக்கப்பட்டவர்.  ஹஃப்ஸா (ரலி) அவர்கள் ஹிஜ்ரி 3ல் நான்காம் மனைவியாக  திருமணம் முடிக்கப்பட்டவர். ஆனால் இவரை மணம்முடிக்கும் சமயம் நபி (ஸல்)  அவர்களுக்கு சவ்தா(ரலி), ஆயிஷா (ரலி) என்கிற இரு மனிவியர் இருந்தனர் என்பது குறிப்பிட தக்கது.)

இவர் "உம்ம அல் மிஸ்கீன்" ஏழைகளின் தாய் என வர்ணிக்கப் படுபவர். மிக மிக இறக்க குணம் உடையவர்.

ஆனால் இவர் நபி (ஸல்) அவர்களை திருமணம் முடித்த அடுத்த இரண்டு வருடத்தில் இறந்து விடுகிறார்.

இவரது நல்லடக்கத்தின் போது இவரது தாய் வழி மூன்று (அல் சாயிப், கதன், அவ்ன்) சகோதரர்களும் உடன் இருந்தார்கள் என்பது குறிப்பிட தக்கது.

நான்காம் திருமணம்: 

குஸைமா இப்ன் அல் ஹாரித் இறந்து போகவே உமைஸ் இப்ன் மஆத் என்பவரை திருமணம் செய்கிறார். அவர் மூலியமாக குவாலாவுக்கு இரண்டு மகள்களும் ஒரு மகனும் பிறக்கிறார்கள்.

7. அஸ்மா பின்த் உமைஸ் (ரலி)
மிகவும் குறிப்பிடும்படியான சஹாபா பெண்மணி...  ராபியா இப்ன் ரியாப் என்பவரை   திருமணம் முடித்து அவரது மரணத்துக்கு பின் ஜாபார் பின் அபிதாலிப்(ரலி) திருமணம் முடித்து, முஃதா போரில் அவரது இரு கைகளும் வெட்டப்பட்டு அவரது மரணத்துக்கு பின் அபு பக்கர் (ரலி) அவர்களை மணம்முடித்து பின்னர் அவரது மரணத்துக்கு பின் அலி இப்ன் அபிதாலிப் (ரலி) அவர்களை மணமுடித்தார்.

8. சல்மா பின்த் உமைஸ் (ரலி)
 
உஹது போரில் கொல்லப்பட்ட ஹம்சா பின் அப்தல் முத்தலீபின் மனைவி, 

9. அவ்ன் இப்ன் உமைஸ் (மகன்)

என குவாலா என்கிற ஹிந்த் பின்த் அவ்ஃப் என்கிற மூத்தட்டிக்கு மொத்தம் 9 + 3 பிள்ளைகள் இருந்தார்கள்.

இப்படிக்கு
பணிவன்புடன் 
நாகூர் தீன்
22/09/2017

மியான்மாரின் உண்மையான நடப்பு நிலவரம் தான் என்ன?

1. மியான்மரின் கச்சின் மற்றும் ஷான் மாநில எல்லை ஓர பகுதியின் அயுதம் ஏந்திய போராட்டத்தில் சீனாவின் நெடுங்காலமான ஈடுபாடு.

2. அரகான் மாநிலத்தின் கடல் எல்லையில் உள்ள   கியோக் பியுவில் இருந்து சினாவின் கன்மிங் வரை செல்லும் சீனாவின் இரண்டு எண்ணை பைப்லைன்கள் மற்றும் சமீபத்திய திட்டமான ரெயில் போக்குவரத்து தடம். இத்திட்டம் ஏற்கனவே OBOR one belt one road initiative என்கிற முந்தைய அடிப்படையில் போடப்பட்டுள்ள புதிய பெயர் கொண்ட modern silk road என்கிற லாவூஸ் முதல் லண்டன் வரையிலான செயற்பாட்டில் இருக்கும் இரயில் தடத்துடன் 18 பில்லியன் டாலர் செலவில் இனைக்கப்பட இருப்பதும் இதனால் விவசாயம் பாதிக்கப்பட்டு இருப்பதும்.

3. மியான்மாரின் கியோக் பியு இயற்கை துறைமுக பங்குகள் சினாவால் 85% கையகப்படுத்தப்பட்டு உருமை கோரப்பட்டுள்ளதும் அதனால மீன் பிடி தொழில் பாதிக்கப்படுள்ளதும்.

அதனால் சீனாவின் கப்பல் சரக்கு போக்குவரத்தில் மலக்கா மார்க்கமாக வராமல் செலவில்  30% மிச்சப்படுகிறது.

மலகா வழியாக வருவதை தவிர்ப்பதால் அமெரிக்காவின் குறுக்கீட்டை முற்றிலுமாக சீனா தவிர்த்து விட்டது.

4. கியோக் பியு இயற்கை துறைமுகத்திற்கு 100 கிலோமீட்டர் தூரத்தில் மற்றொரு துறைமுகம் கட்ட இந்தியா கடன் உதவி செய்து முதலீடு செய்து இருப்பது.

5. இந்தோ மியன்மார் தாய்லாந்து டிரைலேட்ரல் ஹைவே (1360km) சாலை கட்டுமான வேலை திட்டம் மற்றும் ரெயில் சேவை திட்டத்தில் இந்தியாவின் பெரும்பங்கு.

6. தென் கொரியா வின் POSCO iron and steel நிறுவனத்தால் சில வருடங்களுக்கு முன் 3 பில்லியன் டாலருக்கு வாங்கப்பட்ட DAEWOO நிறுவனம் மியான்மாரின் ராகைன் மாநிலத்தை ஒட்டியுள்ள கடல்பகுதியில் ஏகப்பட்ட எரிவாயுவை கண்டெடுத்த உள்ளது.

7. தங்க சுரங்கத்திற்கு மியான்மர் அரசாங்கம் ஏழை மக்களின் விவசாய நிலங்களை கையகப்படுத்தி வைத்திருப்பது.

8. உள்நாட்டு ஆயுதம் ஏந்திய போராளி குழுக்கள் மத்தியில் சரணடைய வைக்க பேச்சு வார்த்தை.

9. அயல்நாட்டு அரசாங்கங்களால் உள்நாட்டு ஆயுதம் ஏந்திய போராளி குழுக்கள், பேச்சுவார்த்தை மேஜையில் அடிபணிய வைக்க உள்நாட்டு அமைதியின்மை மறைமுகமாக பயன்படுத்தப் படுகிறது.

இது எல்லாம் ஒரு புறம் என்றால்

10. இது அனைத்துக்கும் மேலாக 1970 முதல் 135 பூர்வீக சமூக அந்தஸ்தை இழந்து 1982ல் இருந்து முற்றிலுமாக குடியுரிமை நிராகரிக்க பட்ட நிலையில் ரொஹிங்கிய மக்கள் வன்கொடுமைக்கு ஆளாகி இங்கும் அங்குமாக அகதி முகாம்களில் அலைக்கழிக்கப்படுவததையும். அவர்களை அக்கம்பக்கத்து நாடுகள் ஏதும் ஏற்றுக்கொள்ளாத நிலையில் அவர்களின் வாழ்க்கை வாழ்வா சாவா என்ற நிலையில் தற்போது செத்து மடிந்து கொண்டு இருக்கிறார்கள்.

11. அரகான் மாநிலத்தில் பெருமளவு முஸ்லீம்களாக வாழ்ந்த  இந்த ரொஹிங்கிய இனத்து முஸ்லீம் மக்கள், அவர்கள் மத்தியில் இருந்து உருவான ஹர்கத் அல் யகீன் என்ற பின்னர் ARSA என்று பெயர் மாற்றப்பட்ட போராளி குழுக்களால் கடந்த ஆண்டு 9 அக்டோபர், 2017ல் படுகொலைகள் சில நிகழ்ந்து மீண்டும் அப்பாவி மக்கள் இராணுவத்தால் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு, பாதிக்கப்பட்ட நிலையில் அகதி முகாம்களில் தஞ்சம் புகுந்த பின்னரும் சிலர் எஞ்சி இருந்த நிலையிலும் அவர்களின் வீடுகளும் உடமைகளும் சூரையாடப்பட்டு தீயிட்டு கொளுத்தப்பட்டதை மியான்மார் இரானுவமே நேரில் நிண்டு வேடிக்கை பார்த்தது தர்போது அந்நாட்டின் செய்தி ஊடக நிருபர்கள் மூலியாமாக ஆதாரபூர்வ காட்சிகளுடன் நிரூபிக்கப்பட்டு மியன்மார் அரசாங்கம்  சர்வதேச அழுத்தத்திற்கு ஆளாகி இருக்கிறது என்பது குறிப்பிட தக்கது.

12. இதற்கு இடையே ஆகஸ்ட் 24ம் தேதி ஐ நா வின் கோஃபி அன்னான் தலமையிலான மியான்மார் அட்வைசரி கமிஷன் 5 செப்டம்பர் 2016 தேதியை தொடர்ந்து கடின உழைப்பிற்கு பின் பாரதூரமான ராகைன் மாநில சமூக சூழல் குறித்து தனது பரிந்துரையை முன் வைத்தது. அதில் ரொஹிங்கிய மக்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என அழுத்தம் திருத்தமாக பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிட தக்கது.

13. Kofi Annan இறுதி ரிப்போர்ட் ஆகஸ்ட் 24 லி வெளிவந்த அடுத்த நாளே இராணுவ முன்னிலையில் அட்டூழியங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டும் Aung san suu kyi ஏதும் கூறாமல் அமைதியாக இருந்தது சர்வதேச அளவில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வர தற்போது மெல்ல வாய் திறக்க ஆரம்பித்து இருக்கிறார்.

உண்மை நிலை இப்படியாக இருக்க இணையத்தில் வாழ்ந்து வரும் எனது சக நெட்டிசன்கள் ஆதாரமற்ற புகைப்படத்தையும் ஆதாரமற்ற வதந்திகளை பரப்பி வருவதும் வருத்தம் தரும் விஷயமாக உள்ளது... இவர்களின் வதந்திகளை உண்மை என நம்பி ஒரு சில சர்வதேச தலைவர்களும் குறிப்பாக துருக்கி நாட்டு தலைவர்கள் அசிங்கப்பட்டதும் குறிப்பிட தக்க விஷயமாகும்.

எனவே நமது ரொஹிங்கிய சகோதரர்கள் விஷயத்தில் பொறுப்புடன் நடந்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இப்படிக்கு
சமூக அக்கறையுடன்
நாகூர் தீன்.
21/09/2017

Wednesday, September 20, 2017

மியன்மார் ராகைன் பிராந்திய ரொஹிங்கிய இன சுத்திகரிப்பு படுகொலை குறித்த எனது பார்வை இது...

ஒருவர் வாட்ஸ்ஸப்பில் அடிப்படை அறிவு இல்லாமல் எழுதி இருந்ததை கண்டு இதை உங்கள் பார்வைக்கு பதிவு செய்கிறேன்.

எந்த சமுதாயம் தன்னளவில் மாறவில்லையோ அச்சமுதாயத்தினர் மத்தியில் மாற்றங்களை ஏற்படுத்துவதில்லை என்ற இறைவனின்  வாசகத்தை முஸ்லீமாக இருக்கும் இவர் சற்று திரித்து தனது வாதத்துக்கு ஏற்றார் போல எழுதி இருந்தார்.

மேலும் ரொஹிங்கியா மக்கள் வெறுமனே முஸ்லீம்கள் என்ற அடிப்படையில் மட்டுமே கொல்லப்படுவதாக  கூறுவது சரியானதாக இருக்காது என நான் கருதுகிறேன்.

மியன்மாரின் ஏனைய உட்புற பகுதிகளிலும் முஸ்லீம்கள் இன்னமும் வாழ தான் செய்கிறார்கள்.

ஆனால் வருடந்தோறும் குறிப்பிட்ட இந்த ராகைன் பகுதி ரொஹிங்கிய இன  முஸ்லீம்களை மட்டும் கருவறுத்து வருகிறார்கள் என்பதும் பங்களாதேஷ் உட்பட ஏனைய அக்கம்பக்கத்து நாடுகள் ஏதும் கடந்த பல வருடகாலமாக இவ்விஷயத்தில் போதிய ஆர்வம் காட்டாது இருந்து வந்ததும், பங்களாதேஷ் எல்லையில் உள்ள ரோடுகள் மூடப்பட்ட நிலையில் இவர்கள் குறுக்கு வழியாக கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டுள்ள மார்க்கமாக நடந்து சென்று கை கால்களை இழப்பதும், பங்களாதேஷ் நாட்டின் உட்பகுதி ஊருக்குள் அழைத்து செல்லாமல் எல்லையோர பகுதியிலேயே முகாம் இட்டு தங்கவைத்து பங்களாதேஷ் அரசாங்கத்தால் மூன்றாம் தர மக்களாக நடத்தப்படுவதும் கடந்த பல வருடங்களாக உலகம் அறிய நிகழ்ந்து வரும் கொடூரங்களே...

அங்குள்ள அகதி முகாம்களில் போதிய கழிவறை வசதி இன்மையால் சுகாதார சீர்கேடுகள் ஏற்பட்டுள்ளது குறித்தும், உணவு பற்றாக்குறை ஏற்பட்டு வந்துள்ளது குறித்தும், இயற்கை சீற்றங்களால் இருப்பிடங்கள் பாதிக்கப்பட்டு வந்தது குறித்தும் கடந்த காலத்தில் மாதாமாதம் அறிக்கை வெளிவந்த வண்ணம் இருந்துள்ளது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்க விஷயமாகும்.

இதற்கு ஐ நா பாதுகாப்பு கவுன்சில்  தலையீடு அடிப்படையிலான ரொஹிங்கிய மக்களின் அரசியல் அரசாங்க பிரதிநிதித்துவ நிரந்தர சீரமைப்பு தான் சரியான தீர்வாக இருக்கும்.

இதை அங்கிருந்து கண்காணித்து ஐ.நா சபைக்கு தொடர்ந்து கவலையுடன் அறிக்கை சமர்ப்பித்து வரும் விஜய் நம்பியாரும் இதையே தனது கடந்தகால அறிக்கைகளில் தொடர்ந்து வலியுறுத்தி வந்திருக்கிறார்.

இப்படி இருக்கும் நிலையில், நீ மட்டும் ஏன் மூன்று வேளை உணவு உட்கொள்கிறாய் தொண்டை குழியில் குத்தவில்லையா உனக்கு என்றெல்லாம் உண்மை பிரச்சனை மற்றும் பிரச்சினையின் சிக்கல் புரியாது, போதிய  விவரம் அறியாது ஏனோ தானோன்னு புதிது புதிதாக தோன்றி எமோஷனலாக கட்டுரை எழுதுவதினால் இவ்விஷயத்தில் எவ்வித தீர்வையும்  கண்டு விட முடியாது....

ஐ நாவை வலியுறுத்தும் விதமாக போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்... மேலும்  மனித உரிமை மீறலில் ஈடுபட்டு வரும் மியன்மார் மற்றும் பங்களாதேஷ் அரசின் மீது பொருளாதார தடை விதிக்க ஐ நா வை நிர்பந்தித்து போராட்டத்தை முன்னெடுத்து ஊடக வட்டாரத்தில் பதிவு செய்யவேண்டும்.

இதுவே இப்போதைக்கு உள்ள சிவிலைஸ்டு உலகத்தில் ஜனநாயக முறையில் நம்மால் ஆக்கப்பூர்வமாக செய்ய முடிய கூடிய காரியமாகும்.

இதை புரிந்து முஸ்லீம்கள் தமது கருத்தை சர்வதேச ஊடக கருத்து பின்னூட்ட தளத்தில் ஆங்கிலத்தில் பதிவு செய்வதன் மூலம் பலரின் கவனத்தையும் ஈர்க்க முடியும்..

இதை நான் செய்து வருவதால் தான் உங்களையும் செய்ய சொல்கிறேன்...

இப்படிக்கு
சமூக அக்கறையுடன்
நாகூர் தீன்
20/09/2017

Sunday, September 17, 2017

அபு பக்கர் சித்தீக் (ரலி) என்றழைக்கப்பட்ட அப்துல்லாஹ் அவர்களின் மனைவிகளும் பிள்ளைகளும்.

அபு பக்கர் சித்தீக் (ரலி) என்றழைக்கப்பட்ட அப்துல்லாஹ் அவர்களின் மனைவிகளும் பிள்ளைகளும்.

அபு பக்கர் சித்தீக் (ரலி) அவர்களுக்கு ஆறு குழந்தைகள் அதில் மூன்று மகன்கள் மூன்று மகள்கள்.

முதல் திருமணம்:


அவர்களின் முதல் திருமணம் குதைலா என்ற பெண்ணுடன் நடைபெற்றது.. குதைலா மூலியமாக இரண்டு பிள்ளைகளை பெற்றார்கள்.

  1. அஸ்மா 
  2. அப்துல்லாஹ்

குதைலா இஸ்லாத்தை ஏற்கவில்லை, அபு பக்கரும் குதைலாவை விவாகரத்து செய்து விடுகிறார்கள். ஹிஜ்ராத்துக்கு பிந்திய ஒரு காலகட்டத்தில் குதைலா மதீனாவுக்கு தனது மகள் அஸ்மாவை (ரலி) பார்க்க வருகிறார்... அஸ்மாவும் நபி(ஸல்) அவர்களிடம் தனது தாயை சந்திக்கலாமா தன்னுடன் தங்கவைக்கலாமா என்று கேட்டார்கள் அதற்க்கு நபி (ஸல்) அவர்களும் அனுமதி தந்தார்கள்.

இரண்டாம் திருமணம்:


உம்மு ருமன் (ரலி) என்பவர் அபு பக்கரின் இரண்டாவது திருமண மனைவி. அவர் ஆமிர் பின் உமைர் என்பவர்களுடைய மகள். அவர் அப்துல்லாஹ் பின் ஹாரித் என்ற அபு பாக்கரின் நண்பரை திருமணம் முடித்து அவருக்கு துஃபைல் என்கிற பிள்ளையை பெற்றுகொடுத்து, பின்னர் அவர் மரணிக்கவே அபு பக்கர் உம்மு ரூமனை திருமணம் செய்கிறார்கள். இவர் அபு பக்கருக்காக (ரலி)

  1. அப்துர்ரஹ்மான் மற்றும் 
  2. ஆய்ஷாவை ஈன்று எடுக்கிறார்.

அபு பக்கர் (ரலி) இஸ்லாத்தை தழுவியதை தொடர்ந்து இவரும் இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாக ஏற்கிறார். மதீனாவில் மரணித்து போகிறார்கள். நபி(ஸல்) அவர்கள் ஜனாஸா தொழுகை நடத்திக் கொடுத்து அவர்களை சிறப்பிக்கிறார்கள். அதுவல்லாமல் "உங்களில் யாராவது சொர்கத்து அழகியை பார்க்க வேண்டுமெனில் உம்மு ரூமனை பாருங்கள் என்று கூறியும் சிறப்பித்தார்கள்.

மூன்றாம் திருமணம்:


ஹபீபா (ரலி) என்பவர் அபு பக்கரின் மூன்றாவது திருமண மனைவி. மதீனாவில் தன்னுடன் சகோதர பிணைப்பு செய்யப்பட்ட Zசயித் பின் காரிஜா அன்சாரி அவர்களின் மகள். உம்மு ரூமான் (ரலி) மதினாவில் குடிஇருக்கையில் ஹபீபா (ரலி) மதினாவின் சுற்றுவட்டார பகுதியில் வீடு கட்டி வாழ்ந்து வந்தார்.

அபு பக்கர் அவர்களுக்கு,

  1. உம்ம குல்சும் 

என்ற மகளை உண்டாகி அவரது மரணத்திற்கு பின் ஈன்று எடுக்கிறார்.

நான்காம் திருமணம்:


அஸ்மா பின்து உமைஸ், அபு பக்கர் (ரலி) அவர்களின் நான்காம் மனைவி. இவர்கள் ஹாஃப்பர் என்கிற அலி (ரலி) அவர்களின் சகோதரரை திருமணம் செய்து அபிசினியா புலம் பெயர்ந்து சென்றுவர். ஜாஃபருக்காக முஹம்மத், அப்துல்லாஹ் மற்றும் அ'ஃன் என்ற மூன்று பிள்ளைகளை பெற்றவர். முஃதா போரில் ஜாஃபர் ஷஹீதாகி போகவே அபு பக்கர் (ரலி) அவர்களை திருமணம் செய்கிறார்கள்.

அதை தொடர்ந்து அபூபக்கருக்காக ஒரு ஆண் பிள்ளையை பெற்று எடுக்கிறார்கள்...

  1. முஹம்மத் பின் அபு பக்கர்

  அஸ்மாவின் இரண்டு மகன்களுக்குமே "முஹம்மத்" என்ற பெயர் இடுகிறார்கள், ஒருவர் ஹாஃப்பர் (ரலி) அவர்களின் மகனார் மற்றொருவர் அபு பக்கர் (ரலி) அவர்களின் மகனார்.

  அபு பக்கரின் மறைவுக்கு பின் அவரது விருப்பத்துக்கு இணங்க அஸ்மா (ரலி) தான் அபு பக்கரின் (உடலை) ஜனாஸாவை நல்லடக்கத்துக்கு எடுத்து செல்ல தயார் செய்கிறார்கள்.

அதன் பின்னர் சிறுது மாதம் கழித்து அலி பின் அபு தாலிப் (ரலி) அவர்களை திருமணம் செய்து "எஹ்யா" என்ற மகனை அவருக்காக ஈன்று எடுக்கிறார்கள்.

மகன்கள்:

  • அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர்  (ரலி):

வரலாற்று குறிப்புகள் பிரகாரம் அபு பக்கர் அவர்களின் மூத்த மகன், ஆயிஷா (ரலி) அவர்களின் சகோதரர் அப்துர்ரஹ்மான் இஸ்லாத்தை தழுவி மதீனாவுக்கு வரவில்லை. பத்ரு போரில் மக்கத்து குறைஷிகளுடன் சேர்ந்து போரிட்டு பின்னர் சில காலம் கழித்து ஹுதைபியா உடன்படிக்கையின் போது இஸ்லாத்தை ஏற்றார். பின்னர் பல போர்களில் பங்குபெற்றார்... எமாமா போரில் பங்குபெற்று நான் தான் அடுத்த இறைதூதர் என்று பிரகடனம் செய்த முசைலமாவை முறியடிக்க போரிட்டு முசைலமாவின் போர் தளபதி மஹக்கம என்பவரை போரில் வீழ்த்தி கொலைசெய்தார்.

  • அப்துல்லாஹ் பின் அபூபக்கர் (ரலி):

அபு பக்கர் (ரலி) அவர்களின் இரண்டாவது மகனான அப்துல்லாஹ் குதைலாவுக்கு பிறந்தவர் ஆதிகா என்ற அழகிய பெண்ணை திருமணம் முடித்து இருந்தார்... ஆதிகா என்பவர் zசெய்த பின் ஆமிர் பின் நவ்ஃபல் என்பரின் மகள்  உமர் (ரலி) அவர்களின் கசின். மிக பெரிய பேர் அழகியாக இருந்தார். அப்துல்லாவும் ஆதிகாவின் அழகில் மயங்கி மார்க்க கடமைகள் நிறைவேற்றாதவாரக இருந்து வந்தார். தகப்பனாராகிய அபு பக்கரும் அவரை தொடர்ந்து கடுமையாக எச்சரித்தும் வந்தார் ஆனாலும் அப்துல்லாஹ் ஆதீகாவின் மீது கொண்டிருந்த காதல் மயக்கத்தில் இருந்து மீண்டு வரா முடியாமல் மூழ்கி இருக்கவே இறுதியாக தனது மகனிடம் மூன்றே நாட்களில் நீ ஆதிகாவை விவாகரத்து செய்து விடவேண்டும் என்பதாக கண்டிப்புடன் கூறிவிடுகிறார்.

அதையடுத்து மகனார் அப்துல்லாஹ்வும் விவாகரத்து செய்து விடுகிறார்க ஆனால் புத்தி பேதளித்தவராக சதா ஆதிகாவின் நினைப்பிலேயே உண்ணாமல் பருகாமல் உறங்காமல் அதிகாவின் இழப்பை நினைத்து அழுது புலம்பியவராக இருக்கிறார். இது பின்னர் நபி (ஸல்) அவர்களின் கவனத்துக்கு வரவே, திருமண விவாகரத்தை ரத்து செய்து இருவரையும் இணைத்து வைக்கிறார்கள். அது முதல் அப்துல்லாஹ் கொண்டிருந்த அதிகா மீதான காதல் தனது மார்க்க கடமைகளில் குறிக்கிடாமல் மிக கவனத்துடன் பார்த்துக்கொண்டார் என்ற சரித்திர குறிப்புகள் இருக்கிறது... பின்னர் அப்துல்ல்லாஹ் பின் அபு பக்கர் பல போர்களில் கலந்துக்கொள்கிறார் தாயிஃப் போரில் காயப்பட்டு 633 வருடம் இறந்து போகிறார். அதன் பிறகு அபு பக்கர் கலிபாவாக இருந்த முதல் வருடம் ஆதிகாவை உமர் (ரலி) அவர்கள் மறுமணம் செய்துக் கொள்கிறார்கள்.

  • முஹம்மத் இப்ன் அபூபக்கர்:

முஹம்மத் பின் அபு பக்கருக்கு இரண்டு அல்லது மூன்று வயதாக இருக்கும்போதே அபு பக்கர் (ரலி) அவர்கள் இறந்து விடுகிறார்கள்.

அலி (ரலி) அவர்கள் முஹம்மத் பின் அபுபக்கரை இரண்டு அல்லது மூன்று வயது சிறு கைக்குழந்தையாக இருக்கும் போதிலிருந்தே தத்தெடுத்து பிரியமுடன் வளர்க்கிறார்கள்...
இந்த முஹம்மத் இப்னு அபு பக்கர் தான் பின்னர் காலத்தில் எகிப்து ஆளுனர் பற்றி உஸ்மான் (ரலி) அவர்களுடன் புகார் சொல்ல்கிறார், உஸ்மான் (ரலி) அவர்கள்  

நடவடிக்கை தனக்கு தோதாக திருப்திகரமாக நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால் எகிப்தில் இருந்து 700 பேர் கொண்ட கிளர்ச்சியாளர்களை வரவழைத்து நீங்களே கேளுங்க என்றவாறு வரவழைத்து 40 நாட்கள் முற்றுகைக்கு பின்னர் கலீபா உஸ்மான் கொலை செய்யப்பட்டார்கள்.

அலி (ரலி) அவர்களின் செல்லப்பிள்ளையாக இருக்கிறார் உஸ்மான் (ரலி) அவர்களின் படுகொலைக்கு பின்னர்   பின்னர் கலிபாவாக ஆன     அலி(ரலி) அவர்கள் முஹம்மத் பின் அபு பக்கர எகிப்து பிராந்தியத்தின் ஆளுனராக நியமிக்கிறார்கள் பின்னர் அமர் பின் ஆஸ் (ரலி) அவர்களால் முஆவியா (ரலி) அவர்களின் கட்டளை அடிப்படையில் போரிட்டு வீழ்த்தி கைப்பற்றப்பட்டு கைது செய்யப்பட்டு பின்னர் கொல்லப்படுகிறார்.

மகள்கள்:

  • அஸ்மா (ரலி):

அபு பக்கரின் மகள்களில் மூத்தவர் அஸ்மா (ரலி) பின்னர் இஸ்லாத்தை அபு பக்கருடன் ஏற்க மறுத்த குதைலா என்ற அபு பக்கரின் மனைவிக்கு பிறந்தவர். நபி (ஸல்) அவர்களின் ஹிஜ்ரத்தின் போது அபூபக்கர் (ரலி) அவர்களுடன் குகைக்குள் தங்கி இருந்து போது அஸ்மா தான் இரவு நேரத்தில்  இருவருக்கும் உணவு கொண்டு வந்து கொடுப்பவராக இருந்தார்.

நபி (ஸல்) அவர்களும் அபு பக்கர் (ரலி) அவர்களும் குகையை விட்டு புறப்பட தயாராகும்போது அஸ்மா தனது ஆடையில் பெல்ட் போல நீளமான துணியை கிழித்து இரண்டு பெல்ட் போன்று கட்டி தந்தார். இந்த சிறந்த யோசனை மற்றும் யுக்தியை நபி(ஸல்) அவர்கள் பாராட்டி "இரட்டை பெல்ட்டுக்கு சொந்தக்காரர்" என்று சிறப்பிச்சு வர்ணித்தார்கள்.

நபி (ஸல்) அவர்களின் மச்சான் ஜுபைரை மணமுடித்து இருந்தார் அஸ்மா. இருவருமாக மதீனாவுக்கு ஹிஜ்ரத் செய்த பின் முஸ்லீம்கள் மத்தியில் முதலாவதாக ஒரு குழந்தையை ஈன்று அவருக்கு அப்துல்லாஹ் என்று பெயரிட்டார்.

கர்பலாவின் பெரும் துயரத்துக்கு பின்னர் அப்துல்லாஹ் மக்காவில் இருந்தவண்ணம் தன்னை தானே கலீபாவாக அறிவித்ததை அடுத்து உமையாக்கள் மக்காவை நோக்கி படையெடுத்தார்கள்.

அதை தொடர்ந்து அப்துல்லாஹ் தனது என்பது வயதான தாயாரிடம் ஆலோசனை செய்கிறார்கள்...

அதற்கு அஸ்மா (ரலி) அவர்கள் உனது நோக்கம் உண்மையானது உன்னதமானது என்று நீ நம்பிக்கை கொண்டிருக்கும் பட்சத்தில் அவர்களை எதிர்த்து போரிட்டு மரணிக்கவும் தயாராக இருக்கவேண்டும், அப்படியல்லாமல் உனது நோக்கம் வெறும்ந்தா உலக ஆதாயமாக இருக்குமேயானால் உனது எதிரிகளுடன் நீ சமரசம் செய்துக்கொள் என்பதாக கூறி இருக்கிறார்கள்.

அஸ்மா விற்கும் ஜுபைருக்கும் ஹிஜ்ரி முதல் ஆண்டில் பிறந்த அப்துல்லாஹ் பின் ஜுபைர் (ரலி) அவர்கள் கொலைசெய்யப்பட்டு அவரது உடலை பொதுமக்கள் பார்வைக்கு தூக்கில் இட்டிருந்தார்கள்.

  • ஆயிஷா (ரலி):


ஆயிஷா (ரலி) அவர்களை பற்றி தான் நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான் நபி (ஸல்) அவர்களின் இளம் மனைவி, மிக சிறிய வயதிலேயே விதவையாகியவர். நிறையபல ஹதீஸ்களை நமக்கு பாடமாக கற்றுகொடுத்தவர்.... முஸ்லீம்கள் மத்தியில் மிகுந்த செல்வாக்கு மிக்கவர்.

  • உம்மு குல்சும்:

உம்மு குல்சும் என்பவர் அபு பக்கர் (ரலி) அவர்களின் மறைவுக்கு பின்னர் சில மாதங்களில் பிறந்தவர்... பின்னர் காலத்தில் தல்ஹா பின் உபைதுல்லாவை திருமணம் செய்கிறார்கள். அவரது மறைவுக்கு பின்னர் அவரது சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் உபைதுல்லாவை மறுமணம் முடிக்கிறார்கள்.


Saturday, September 16, 2017

அனிதாவின் மரணம் தூண்டுதல் அடிப்படையில் நிகழ்ந்த கொலையா அல்லது தற்கொலையா?

இந்த நீட் தொடர்பான விஷ்யம் என்பது உச்ச நீதிமன்றத்துக்கு சென்று விட்ட நிலையில் ஒரு கட்டத்தில் இருபுறமும் வெட்ட கூடிய double edged sword ஆக மாறி இருந்தது என்றே சொல்ல வேண்டும்.

காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகர் ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம், நீட் நுழைவுத் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்கள் சார்பாக வழக்கில் ஆஜாராகி இருந்த நிலையில்..

மற்றொரு புரம் நீட்டில் தோல்வியுற்ற அனிதாவும் அவ்வழக்கில் இணைக்கப்பட்டு தான் 1176 எடுத்த நிலையில் நீட்டில் 720க்கு வெறும் 86 மட்டுமே எடுக்க முடிந்ததாகவும் நீட்டை ஒரு வருட காலத்துக்கு ஒத்திவைத்தால் தனக்கு மருத்துவ சீட்டு கிடைக்கும் எனவே  ஒத்திவைக்க வேண்டும் கோரி இருந்தார்.

அப்படி ஒரு வருடம் ஒத்தி வைத்தால் ஏற்கனவே தேர்வு எழுதிய S Anitha உட்பட ஏனைய தமிழ் நாட்டு ஸ்டேட் போர்ட் மற்றும் இன்ன பிற மாணவர்களின் நிலை என்னவாகுவது அவர்களின் மருத்துவ படிப்புக்கான இலச்சியத்தை என்ன செய்வது என்று நளினி சிதம்பரம் வாதாடி இருந்தார்.

ஆக ஒருவருடம் ஒத்திவைத்து இருந்து அதனால் மருத்துவ கனவு பாதிக்கப்பட்ட வேறொரு ஏழை மாணவன் யாராவது தற்கொலை செய்து இருந்தால் இதே அளவு சென்சிடைஸ் செய்யப்பட்டு அரசியல் ஆக்கப்பட்டு இருக்குமா... சந்தேகம் தான்... என்ன...

ஒரு புறம் அனிதா தற்கொலை செய்துக் கொள்ளவில்லை மாறாக நீட் தேர்வு அனிதாவி கொலை செய்து விட்டது என்றே சொல்ல வேண்டும் என்கிறார்கள்...

மற்றொரு புறம்.... இவ்வளவு துணிச்சல் தகிரியத்துடன் மோடிவேடடாக இருந்த அனீதா எப்படி இறுதியில் தற்கொலைக்கு மனமாறினார் என்ற கேள்விக்கு....

அவருக்கு ஆதரவாக தொலைக்காட்சியில் பேசிய திரைப்பட துறையை சேர்ந்த ஒருவர் கூறுகிறார்...

ஒருகால் தற்கொலை மூலம் தமக்கு நேர்ந்ததை இவ்வுலக்த்துக்கு எடுத்து சொல்ல நினைத்திருக்க கூடும்....

இது கிட்ட தட்ட முத்துக்குமார் செய்த தியாகம் போல என்று குறிப்பிட்டு விட்டு வேறு ஒரு இடத்தில்....

அவர் தோழிகள் இடத்தில் அரசல் பரசலாக பேச்சு வாக்கில் தான் இவ்வாறு செய்ய இருப்பதை சூட்சமமாக தெரியப்படுத்தி இருக்கிறார் என்றும் விவரிக்கிறார்.

அது போக கூடுதலாக அனிதாவின் வட்டாரத்தில் முத்து குமார் தெரிவு செய்த முடிவை நினைவலையாக பேச்சு வாக்கில் நினைவுப் படுத்தி இருக்க கூடும் எனவும் அதுவே துணிச்சலாக விடா முயற்சியாக் பேசிய அனீதாவின் இறுதி கட்டத்தில் அவரது மனநிலையில் தற்கொலையை ஒரு அதிர்வலை ஏற்படுத்த உதவும் ஆயுதமாக தனக்கு நிகழ்ந்த அநீதி இனி யாருக்கும் நிகழ கூடாது என கருதி தற்கொலையை நோக்கி நகர்த்தி இருக்க கூடும் என்றும் பேசப் படுகிறது...

தமிழக காவல்துறை தான் முத்துக்குமார். பற்றிய நினைவை அனித்தாவுக்கு ஏற்படுத்தி தற்கொலை ஒரு அதிர்வலையை உண்டுபண்ணும் என வித்திட்டது யார் எனறு புலனாய்வு செய்ய வேண்டும்.

வேற என்னங்க செய்வா ஒருத்தி... இன்னொரு வருடம் எப்படி காத்திருக்க முடியும் என தற்கொலையை நியாயப்படுத்தும் விதமாக பேசியும் இருந்தார்.

தற்கொலையை மறைமுகமாக தூண்டுவதும் கொலை செய்யும் அளவுக்கு கொடூர குற்றம் தானே.

இது ஒரு புறம் இருக்க, இதே நீட்டின் மூலம் தேர்ச்சி பெற்ற இன்னும் சில ஏழை  SC ST மாணவர்களுக்கு மருத்துவ படிப்புக்கான வாய்ப்பு கிடைக்கவும் தான் செய்துள்ளது...

அப்படி ஒருகால் அனிதாவுக்காக ஒரு வருடம் ஒத்தி வைத்து இருந்தால் அந்த SC ST மாணவர்களின் நிலை என்னவாக ஆகி இருக்குமோ, அதுவும் தற்கொலை செய்து இருந்தால், அப்போது யார் கொலை செய்ததாக கூறுவார்கள்?

சிந்திக்க வேண்டுகிறேன்.
சமூக அக்கறையுடன் 
நாகூர் தீன்
02/09/2017

நீட் தேர்வு சிலபஸும் ~ தமிழ்நாடு அரசு கல்வி இயக்க பாடநூல்களும்.

கீழே நான் குறிப்பிட்டுள்ளது நீட் தேர்வு சிலபஸ் மற்றும் அதில் குறிப்பிட பட்டுள்ள தலைப்புகளுக்கு ஏற்றார் போல உள்ள தமிழ்நாடு அரசு பாடநூல் அதாவது ஸ்டேட் போர்ட் புத்தகத்தின் லிங்க்.. 

நீட் சிலபசுக்கு நெருங்கி இருக்கான்னு அந்த லிங்க பார்த்துவிட்டு பேசுங்க பிளீஸ்...

PHYSICS

நீட் சிலபஸ்
CLASS XI
1. Physical world and measurement
2. Kinematics
3. Laws of Motion
4. Work, Energy and Power
5. Motion of System of Particles and Rigid Body
6. Gravitation
7. Properties of Bulk Matter
8. Thermodynamics
9. Behaviour of Perfect Gas and Kinetic Theory
10. Oscillations and Waves


நீட் சிலபஸ்
CLASS XII
1. Electrostatics
2. Current Electricity
3. Magnetic Effects of Current and Magnetism
4. Electromagnetic Induction and Alternating Currents
5. Electromagnetic Waves
6. Optics
7. Dual Nature of Matter and Radiation
8. Atoms and Nuclei
9. Electronic Devices


CHEMISTRY:

நீட் சிலபஸ்
CLASS XI
1. Some Basic Concepts of Chemistry
2. Structure of Atom
3. Classification of Elements and Periodicity in Properties
4. Chemical Bonding and Molecular Structure
5. States of Matter: Gases and Liquids
6. Thermodynamics
7. Equilibrium
8. Redox Reactions
9. Hydrogen
10. s-Block Element (Alkali and Alkaline earth metals)
11. Some p-Block Elements
12. Organic Chemistry- Some Basic Principles and Techniques
13. Hydrocarbons
14. Environmental Chemistry

நீட் சிலபஸ்
CLASS XII
1. Solid State
2. Solutions
3. Electrochemistry
4. Chemical Kinetics
5. Surface Chemistry
6. General Principles and Processes of Isolation of Elements
7. p- Block Elements
8. d and f Block Elements
9. Coordination Compounds
10. Haloalkanes and Haloarenes
11. Alcohols, Phenols and Ethers
12. Aldehydes, Ketones and Carboxylic Acids
13. Organic Compounds Containing Nitrogen
14. Biomolecules
15. Polymers

ஸ்டேட் போர்ட் பாட புத்தகம்
Chemistry in Everyday Life
http://www.textbooksonline.tn.nic.in/Books/12/Std12-Chem-EM-1.pdf
http://www.textbooksonline.tn.nic.in/Books/12/Std12-Chem-EM-2.pdf

BIOLOGY

நீட் சிலபஸ்
CLASS XI
1. Diversity in Living World
2. Structural Organisation in Animals and Plants
3. Cell Structure and Function
4. Plant Physiology
5. Human physiology


நீட் சிலபஸ்
CLASS XII
1. Reproduction
2. Genetics and Evolution
3. Biology and Human Welfare
4. Biotechnology and Its Applications
5. Ecology and environment

இப்படிக்கு
சமூக அக்கறையுடன்
நாகூர் தீன் 
3 செப்டம்பர், 2017

நக்கீரன் பத்திரிகைக்கு பேட்டி அளித்த Prince Gajendra Babu விற்கு என் மறுப்பு


இவர் சொல்லும் அதே அடிப்படையில் தான் எந்த ஒரு தேர்விலும் நுழைவு தேர்விலும், IAS , IPS தேர்விலும் கூட இன்னும் சொல்ல போனால் அகில இந்திய மற்றும் சர்வதேச விளையாட்டு போட்டிகளிலும் கூட முதல் 15 இடத்தையோ அல்லது முதல் 15% இடத்தையோ பிடிக்க வேண்டுமானால் சிறந்த முறையில் கோச்சிங் பெற்றால் தான் முடியும்...

ஏன் என்றால் முக்கியத்துவம் கூட கூட 50,000 சீட்டுக்கு 15 லெட்சம் பேர் போட்டி போடும் சூழல் உருவாகும் போது...

செலக்‌ஷன் பிராஸசும் சர்வைவல் ஒஃப் தி பிட்டஸ்ட் என்ற அடிப்படையில் தான் கடினமாக்கப்படும்.

அப்படி கடினமானால் பிரத்யேக பயிற்சி என்பது அவசியமான ஒன்றாக ஆகிபோகிறது.

ஆக முதல் பத்து இடம் அல்லது பத்து சதவிகிதம் இடம் பிடிக்க வேண்டும் என்றால் தான்... அது கூட if you don't want to take any chances or risk என்றால் தான்..

அப்படி இல்லாமல் பூவா தலையா எது வந்தாலும் பரவாயில்லை சுயமாக முயன்று பார்ப்போம்...

அது கூட 15% ஆல் இந்திய சீட் கோட்டா போக  தமிழ்நாட்டிற்கு என ஒதுக்கப்பட்டுள்ள 85% சீட்டில் எனது சாதி ஒதுக்கீட்டு கட் ஆஃப் மார்க்கு அடிப்படையில் சீட்டு கிடைத்தால் போதும் என்று முடிவில் ரிஸ்க் எடுக்க விரும்பினாலே ஒழிய கோச்சிங் அவசியப்படாது....

இங்க ரிஸ்க் என்று ஏன் சொல்கிறேன் என்றால் அந்த பிற்படுத்தப்பட்ட வகுப்பு கட் ஆஃப் கோட்டாவிலும் கூட கூடுதல் மதிப்பெண் எடுத்து அதிகமான ஆட்கள் தேர்ச்சி பெற்றால் இவர் பின் தள்ள படுவார் என்பதால்.

அதே போன்ற நியதி தான் +2 தேர்விலும் survival of the fittest அடிப்படை தான், 1200 க்கு 1150 க்கு மேல் எடுக்க வேண்டும் என்றால் கோச்சிங் கண்டிப்பாக அவசியப்படுகிறது...

அதுவும் எப்பேற்பட்ட கோச்சிங்... +1 ஆண்டின் பாடத்தை சுருக்கமாக நடத்தி முடித்துவிட்டு +2 பாடத்தை +1 வகுப்பறையிலேயே சில பள்ளிகூடங்கள் காலாண்டு முதலே துவக்கி +2 அரசு போர்ட் பரீட்சைக்கு உண்டான கோச்சிங்க கொடுக்க ஆறம்பித்து விடுகிறார்கள்...

நீட் நுழைவுத்தேர்வுக்கு என்று பிரத்யேகமாக கோச்சிங் கொடுத்தால் தான் முடியும், அது எங்க  டவுனில் படிக்கும் ஏழை மாணவர்களுக்கு எட்டா கனியாக இருக்கும் (கிராமத்தில் மேல் நிலை பள்ளி கிடயாது) என்று சப்பை காரணம் சொல்லும் இவர்கள் யாரும் தனியாக பிரத்யேகமாக பள்ளி கூடத்திலேயே  காசுக்காக டியூஷன் கோச்சிங் வைத்து நடத்தாமல் இல்லை...

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளி கூடங்கள் பல இதற்கு என்று பிரத்யேகமாக துவக்கப்பட்டு கடந்த காலத்தில் +2 தேர்ச்சியில் கோச்சிங் மூலம் முதல் இடம்  பிட்த்து செய்தி தாள்களில் பெருமை பட்டுக்கொண்டது...

ஆக இனி அவ்வகையான +2 1200 க்கு 1198 எல்லாம் நீட் தேர்வில் பயனளிக்காது என்பதாலும் அவர்களின் பிழைப்பில் மன்விழும் என்பதால் இப்படியாக பிதற்றிக் கொண்டு வருகிறார்கள்.

கண்டிப்பாக +2 பொது தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்கள் +1 பாடத்தைல் போதிய கவனம் செலுத்தாததே அவர்கள் #NEET தேர்வில் தோற்று போக காரணமாக இருந்தது என்றே கூற வேண்டும்.

இப்படிக்கு
சமூக அக்கறையுடன்
நாகூர் தீன்
06 செப்டம்பர், 2017

ஜுரம் வந்தால் உடம்பு ஏன் சூடாகிறது?

இக்கட்டுரையில் டெங்கு காய்ச்சல் தொடர்பாகவும் , அதற்குரிய இயற்க்கை மருத்துவம் தொடர்பாகவும், அலோபதி தொடர்பாகவும் எழுதி இருக்கிறேன்... அதர...